தாயின் குரல் !!! அம்மா, எனக்கு ரொம்ப நாளாக ஓரு வருத்தம். என் தங்கை படிப்பில் பூஜ்யம், கோபக்காரி, தூங்குமூஞ்சி, சாப்பிட படுத்துவாள், ஆனால் நீ அவளிடம் தான் பாசமாக இருக்கிறாய். என்னை கவனிக்கறதே இல்லை. ஏன்? செல்ல கண்ணம்மா, நீ சமத்து. உனக்கு எதயும் சமாளிக்கும் திறமை உண்டு. அவளை நினைத்தால் கவலயா இருக்கு. எதையும் சரிவர செய்யாவிட்டால் நாளைக்கு அவள் குடும்ப பொறுப்பை எப்படி சரி வர செய்வாள்? அவள் ஏசப்படுவாளோ என்ற பயம் தான். அதனால் தான் நான் அவளை கவனிக்கிறேன். அவளும் உன்னைபோல் சமத்தா ஆயிடுவாள் இல்லயா !