1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தெய்வம் இருப்பது எங்கே.....

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: k.v. மஹாதேவன்


    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி .....

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: k.v. மஹாதேவன்

    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி

    நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
    நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
    நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
    நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
    யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
    அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
    யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
    அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
    அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி

    கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
    கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
    கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
    கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
    சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
    அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
    சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
    அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு

    ராணி மகாராணி ராணி மகாராணி
    ராஜ்ஜியத்தின் ராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சக்கரைக்கட்டி ராஜாத்தி

    படம் :
    பெற்றால் தான் பிள்ளையா
    பாடியவர்: டி.எம்.எஸ் & பி.சுஷீலா
    இசை: எம்.எஸ்.வி

    சக்கரைக்கட்டி ராஜாத்தி
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே -
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

    பட்டுப் போன்ற உடல் தளிரோ -
    என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
    தோகை மயிலின் தோளை அணைத்து
    கண்டு கொள்வது சுகமோ
    தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் -
    விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்
    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    சேதி என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்

    அத்தை மகனே அத்தானே -
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே -
    நான்பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்.ஆஹா..
    (சர்க்கரை)

    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்
    மடியைத் தேடி வந்து விழவோ -
    இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
    மாலை வரையில் சே(சோ)லை நிழலில்
    கண்கள் உறங்கிட வரவோ
    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    சேதி என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்
    (சர்க்கரை)
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    mendum,nalla vegaththil padaiyeduppu.
    i need.....m.s.rajeshwari songs.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொல்லாதே யாரும் கேட்டால் ........

    திரைப்படம்: சொர்கம்
    பாடல்: சொல்லாதே யாரும் கேட்டால்
    வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தர்ராஜன்


    சொல்லாதே யாரும் கேட்டால்
    எல்லோரும் தாங்க மாட்டார்…

    செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது….

    நீயென்ன சொல்றதும, அட நீயென்னய்யா சொல்றது
    நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
    அட…… நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
    சும்மா சத்தம் போடாதீங்கப்பா (பேச்சுச் சத்தம்)
    சும்மா இருங்கப்பா…. பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான்

    (கை தட்டி) ஹஹ்….ஹஹ்…..ஹஹ்க்கா (சிரிப்பு)

    வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
    சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?
    சுதந்திரம் என்ன செய்யும் ?

    நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
    அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
    ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
    வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை
    கேட்போம் உரிமை கேட்போம் உரிமை…உரிமை…உரிமை…..

    உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
    கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
    காரியம் செய்தால் என்ன…?

    விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது
    பாண்டவாளைப் பார்க்கலையோ
    ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ
    பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்லே…ஆகவே விதி வலியது

    விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை
    உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே.. மேலே..
    முன்னேறு மேலே மேலே
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விண்ணோடும் முகிலோடும்

    திரைப்படம்: புதையல் (1957)
    பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
    வரிகள் : ஆத்மநாதன்

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
    விளையாடி.. இசை பாடி….
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
    காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
    ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
    விளையாடி.. இசை பாடி..

    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
    விளையாடி…… இசைபாடி……
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி.....

    படம் :
    ரத்தக் கண்ணீர்
    நடித்தவர் : எம். ஆர். ராதா
    பாடியவர் : சி.எஸ். ஜெயராமன், எம்.ஆர் ராதா
    பாடல் : கு.சா.கிருஷ்ணமூர்த்தி


    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
    கொள்வதென்பதேது (2)

    (எம்.ஆர்.ராதா)
    ஆம் ஆம்..
    வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
    எனக்கு நிம்மதி ஏது

    அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் (2)
    அரும்பிட முடியாது

    (எம்.ஆர்.ராதா)
    முடியாது. உண்மை, உண்மை,
    என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
    அத்தனையும் அற்று போய்விட்டது

    அமைதியழிந்தது புயலும் எழுந்தது
    ஆணவம் இன்றோடொழிந்தது (2)

    (எம்.ஆர்.ராதா)
    ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
    அத்தனையும் அற்று போய்விட்டது

    குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
    நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது

    (எம்.ஆர்.ராதா)
    வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
    கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
    இன்று கண்ணையும் இழந்தேன்
    வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கா கா கா கா கா கா
    வரிகள்: உடுமலை நாராயண கவி
    படம்: பராசக்தி
    பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
    இசை: ஆர்.சுதர்சனம்
    ஆண்டு: 1952



    கா கா கா கா கா கா
    ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
    அன்போடு ஓடிவாங்க என்ற
    அனுபவப் பொருள் விளங்க – அந்த
    அனுபவப் பொருள் விளங்க – காக்கை
    அண்ணாவே நீங்க அழகான வாயால்
    பண்ணாகப் பாடுறீங்க
    அண்ணாவே நீங்க அழகான வாயால்
    பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
    ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
    கா கா கா

    சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
    கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
    சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
    கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
    காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
    தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
    காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
    தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
    சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
    தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
    கா கா கா

    எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
    பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
    பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
    எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
    பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
    இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
    இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
    எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
    பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
    பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
    பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
    பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்.....


    திரைப்படம்:
    களத்தூர் கண்ணம்மா
    பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்


    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
    சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
    வழி ஒன்று தான்
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
    சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
    தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
    தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்

    இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம்
    உலகினில் மாறாத நீதி
    வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
    வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
    மறைவது தான் வாழ்வில் பாதி

    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்

    ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும்
    மானிட சமுதாய எல்லை – இதில்
    தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
    தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
    பெண்மையும் இல்லாமல் இல்லை


    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
    சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
    தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
    தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சந்திரபாபு பாடல்கள்



    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
    ....

    படம் :
    மணமகன் தேவை
    பாடியவர் : சந்திரபாபு
    இசை : m.s.v

    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே

    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

    கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி

    கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி

    கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை
    கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை

    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

    கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
    கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது – என்
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது

    திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
    திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்

    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

    பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
    தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
     
    Last edited: Aug 22, 2010

Share This Page