1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா....

    படம்: அரசிளங்குமரி
    பாடியவ்: சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
    சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா - நீ எண்ணிப் பாரடா
    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

    ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
    நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி - உன்
    நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
    தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
    தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இரவும் நிலவும் வளரட்டுமே.....

    திரைப்படம்:
    கர்ணன்
    பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
    இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே
    தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே

    மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
    மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
    இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
    இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே

    ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
    அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
    நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
    நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காவிரிப் பெண்ணே வாழ்க

    திரைப்படம்:
    பூம்புஹார்
    பாடியவர்கள்: சௌந்தரராஜன், சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    திரைக்கதை வசனம்: கலைஞர் மு. கருணாநிதி

    காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
    காதலன் சோழ வேந்தனும் வாழ்க
    காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
    காதலன் சோழ வேந்தனும் வாழ்க
    காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

    தென்குலப் பெண்ணரைத்த மஞ்சளில் குளித்தாய்
    திரும்பிய திசையெல்லாம் பொன்மணி குவித்தாய்

    நடையினில் பரத கலையினை வடித்தாய்
    நடையினில் பரத கலையினை வடித்தாய்
    நடையினில் பரத கலையினை வடித்தாய்
    நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய்

    காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

    உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
    கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்
    உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
    கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்

    ஆயினும் உன் நெஞ்சில் பகையேதும் இல்லை
    அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை

    ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
    அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
    ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
    அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....

    திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி
    பாடியவர்கள்: t.m. சௌந்தரராஜன்

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
    மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே
    சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
    ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே
    அநியாயம் ஆத்தாடியோ

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

    சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக
    வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக
    பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
    வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
    அடி சக்கே

    வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது
    கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது
    ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
    வெக்கத்துக்கு விலையில்லையே

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

    ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மாருக்கெட்டு அடையாளம்
    நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

    தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே - எங்க
    ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும்?
    ஹேஹே

    காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
    நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே
    கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா?

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
    அடி ஆத்தாடியோ
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்....

    திரைப்படம்: ஆயிரம் ரூபாய்
    பாடியவர்கள்: p. சுசீலா

    ஒயுங்கே தவறாமே ஊரை எத்தி வாயாமே
    பொயுதே வீணாக்காமே புவாவைத் தேடிக்கணும்

    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
    அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
    அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
    ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

    மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே
    குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே
    மச்சு குச்சு எல்லாமே மனசுலே தானிருக்கு
    மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்

    கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
    கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
    இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
    இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
    மரத்தேப் படைச்சவன்தான் மனுசாளப் படச்சிருக்கான்
    வாரத ஏத்துக்கத்தான் மனசே கொடுத்திருக்கான்

    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
    அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

    தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
    தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
    துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
    துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
    துட்டும் கையில இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
    பொட்டுயும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே

    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
    அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
    ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்....

    திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: மெல்லிசை மன்னர் m.s. விஸ்வநாதன்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ?
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்
    தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
    தானென்று சொல்லாத போதும்
    தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
    தானென்று சொல்லாத போதும்
    தானென்று சொல்லாத போதும்
    ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்

    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லாத இடம் தேடி வருவான் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
    ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
    இறைவனை நம்பி வ்ந்தாயோ?
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
    எல்லோருக்கும் தந்தை இறைவன்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்று ஊமைப் பெண்ணல்லோ...

    திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
    பாடியவர்: A.l. ராகவன், p. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: M.s. விஸ்வநாதன்

    ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
    உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
    ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
    ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
    யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்
    ஓஹோஹோ ஹோஹோஹோ ஒஹோஹோஹோஹோ
    ஹொஹோஹோஹொஹோஹொஹோ ஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோஹோஹோஹோ


    அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா
    உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
    அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா
    உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ


    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்
    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ


    ஓஹோஓஹோ ஓஹோ ஹொஹோஹோஹோ
    ஓஹோஹோ ஹொஹோஹோ ஹொஹோஹோ ஹோய்


    வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
    கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
    கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
    நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ


    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

    ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்

    ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ
    காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
    மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
    இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
    அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
    தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
    தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
    சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
    (மணிப்புறாவும் மாடப்புறாவும் )
    ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
    ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
    ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
    ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
    ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண் போன போக்கிலே கால் போகலாமா?....

    திரைப்படம்: பணம் படைத்தவன்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?

    பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
    புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்.....

    படம்: ஆடிப்பெருக்கு
    இயற்றியவர்: கண்ணதாசன்
    பாடியவர்: பி. சுசீலா
    இசை: ஏ.எம். ராஜா

    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
    கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
    அலைமோதும் நிலை கூறவா? - இந்தக்
    கனிவான பாடல் முடிவாகு முன்னே
    கனவான கதை கூறவா - பொங்கும்
    விழி நீரை அணை சேர்க்கவா
    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
    கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
    அலைமோதும் நிலை கூறவா?

    பொருளோடு வாழ்வு உருவாகும் போது
    புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
    புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
    மதியாமல் உரையாடுவார் - ஏழை
    விதியோடு விளையாடுவார் - அன்பை
    மலிவாக எடை போடுவார் - இந்தக்
    கனிவான பாடல் முடிவாகு முன்னே
    கனவான கதை கூறவா - பொங்கும்
    விழி நீரை அணை போடவா?

    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
    கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
    அலைமோதும் நிலை கூறவா?

    அழியாது காதல் நிலையானதென்று
    அழகான கவிபாடுவார் - வாழ்வில்
    வளமான மங்கை பொருளோடு வந்தால்
    மனம் மாறி உறவாடுவார்
    கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
    எளிதாக விலை பேசுவார் - இந்தக்
    கனிவான பாடல் முடிவாகு முன்னே
    கனவான கதை கூறவா - பொங்கும்
    விழி நீரை அணை போடவா?

    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
    கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
    அலைமோதும் நிலை கூறவா?
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளம் என்பது ஆமை....


    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை
    இல்லை என்றால் அது இல்லை

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    தண்னீர் தணல் போல் எரியும் - செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    தண்னீர் தணல் போல் எரியும் - செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    நண்பனும் பகை போல் தெரியும் - அது
    நாட்பட நாட்படப் புரியும்
    நாட்பட நாட்படப் புரியும்

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    உள்ளம் என்பது ஆமை அதில்
    உண்மை என்பது ஊமை
     

Share This Page