திருக்குறளுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர் இன்றய தமிழை செம்மொழி ஆக்கியவர் அண்ணாவின் தம்பி திருக்குவளை மைந்தன் அஞ்சுகம் பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் தமிழ் அன்னையின் தத்துப்பிள்ளை கலைஞர் கருணாநிதி தமிழுக்கு உழைத்து களைத்த தமிழ்மகனே போதும் வாழ்வு என நினைத்து சுவாசத்தை நிறுத்தி உன் அண்ணா அருகே துயில் கொள்ள சென்று விட்டாயா அடுக்கு மொழி வசனங்களும் அழகிய தமிழ் உச்சரிப்புக்களும் எழுச்சி மிகு உரைகளும் ஏற்ற மிகு தமிழில் தந்து இளைய தலைமுறையை உருவாக்கியவரே உமக்கு தமிழ் சமுதாயத்தின் அன்பு மிகு உள்ளங்களின் ஆத்மார்த்த சமர்ப்பணம்