உனக்கு நிறைய கேள்விகள் இருந்தன நிறைய சமாளிப்புகள் நிறைய குற்றச்சாட்டுகள் நிறைய கோபங்கள் நீ கையசைத்துப்போகும்போது என்னிடம் ஒரு காதல் இருந்தது கொஞ்சம் தேநீர் இருந்தது நிறைய மழை இருந்தது -லதாமகன்
ஒரு நேரம்.. பெருக்கெடுத்து ஓடுகிறது கண்மாய் உடைத்து செல்லும் வெள்ளம் போல.. ஒரு நேரம் வருடி செல்கிறது குழலில் இருந்து ஒழுகும் மெல்லிசையைப் போல வலமென்றோ இடமென்றோ கைக்காட்ட முடிவதில்லை. மேலென்றோ கீழென்றோ இடைக்கோடிட முடிவதில்லை. அவள் குரலின் கதகதப்பையும் அன்பின் வெதுவெதுப்பையும் என்னுள்ளே புதைத்துவிடுகிறேன். வெடித்து வெளிவரும் நாளில் மடிந்து போயிருக்க வேண்டும் நான்.
தமிழிற் சிறந்த மொழியுமில்லை காதலிற் சிறந்த தொழிலுமில்லை வற்றாத ஜீவநதியாய் சொற்பெருக்கெடுத்தோடும் என் தமிழன்னையே வற்றிவிட்டாள்- என் காதலை சொல்ல வார்த்தையில்லாமல்