காதில் ஒலித்த வார்த்தைகள் மொழியில் சேர்ந்திடும் சங்கீதமாய் ஒலித்த குரலும் ராகத்தில் கலந்திடும் விவாதித்த கருத்துக்கள் எண்ணங்களில் நிறைந்திடும் வழிகாட்டிய அறிவுரைகள் செயல்பாட்டில் இருந்திடும் பார்வைகள் கரையலாம் வார்த்தைகள் மறையலாம் கனவுகள் கலைந்திடும் காலாந்தனில் விட்டு செல்லும் சுவடுகளே நினைவுகளாய் நெஞ்சினில் இருந்திடும் !
மாறாத வடுக்கலாக அல்லாமல் அழகான சுவடுகளை விட்டுச்செல்வோம் என நினைவு படுத்தியதற்கு நன்றி.. சிந்தனை தூண்டும் கவிதை
சுவடுகள் - பின்தொடர்ந்து வருவதற்கான பாதையாகவும் இருக்கலாம், பின் வருபவர்க்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம். சுவடுகளோடே பயணமா,அன்றி அவற்றின் பாடங்கள் கொண்டு தொடர்வதா என்பதை அவரவரே வரையறுத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் சரியோ தவறோ அனைவரும் விட்டுச் செல்லக் கூடும் சுவடுகளை...
ஆம் பவித்ரா. நாம் செய்யும் தவறுகளும் பின்வருபவர்க்கு எச்சரிக்கையாய் அமையலாம். Liked your different perspective. நன்றி
சுவடுகள் சுகமாகவும் இருக்கிறது .சில சமயங்களில் சுமையாகவும் இருக்கிறது .சுகமான சுவடுகளை நினைத்து நினைத்து ஆனந்தம் கொள்கிறோம் .சுமையானவைகளை நினைத்தால் மனம் கனக்கிறதே . லக்ஷ்மி சுவடுகள் பதிப்பதற்கு உங்களுக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன