காற்றில் அசைந்தாடும் இலைகளின் சங்கீதம் பாதங்களில் மிதிபடும் காய்ந்த சருகுகளின் சத்தம் புல்லின் மேல் நீர் இரைக்கும் சாரலின் மென்மையான ஒலி சிற்றோடையின் பாறைகளில் மெல்ல நீர் அடித்து விலகும் சத்தம் கூட்டமாக இரைத் தேடும் பறவைகளின் சத்தம் தெற்கே பறந்து செல்லும் வாத்துகளின் கூக்குரல் தூரத்தே கேட்கும் வாகனங்களின் இரைச்சல் விண்ணில் காற்றை கிழித்து செல்லும் விமானத்தின் பேரிரைச்சல் மனதின் இரைச்சல் அடங்கி இருக்கும் வேளைதனில் இவை அனைத்தும் ரீங்காரமாய் இசைக்குமே! அதனினும் இன்னிசையே 'அம்மா' என்று ஓடிவந்து கால்களை கட்டி கொள்ளும் ஒரு குழந்தையின் மொழியே!
Dear jskls, Your poem reminded me of Thiruvalluvar's "kuzal inidhu yaz inidhu enbar avardham mazalai sol keladavar". Viswa
இருக்காதா பின்னே, " குழல் இனிது யாழ் இனிது என்பர் 'தம்' மக்கள் மழலை சொல் கேளாதார்" என்று சும்மாவா சொன்னார்கள் :thumbsup
Very beautiful poem on meditating upon silence and listening to all these wonderful sounds, your concluding lines were awesome, yes indeed isn't the voice of the child calling for the mother most beautiful and divinely sweet and melodious of all...@ awesome @jskls