குளக்கரை விடியல்! இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... சூரியக்கதிர் வருடச் செவ்விதழ் விரித்தது தண்ணீர் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது நிலவுக்கு ஏங்கிடும் அல்லி... அல்லிக் குளத்தினில் வெள்ளிச் சிதறல்கள், துள்ளித் திரியும் மீன்கள்... மீன்களைப் பார்த்ததும் மோகம் பெருகிட மோனத் தவமியற்றும் கொக்கு... கொக்கிற்குப் போட்டியாய் குளக்கரையில் தவமிருக்கும், ஒற்றைக்கால் அரசமரம்... அரசமரத்தடியில் அசையா நெடுந்தவம், அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!
SM IL--க்கு நல்வரவு! இன்றைய விடியல் எனக்கும் இனிமையே...உங்கள் புனைவைப் படித்ததும். இங்கே குளமும், கரையும், அரசமரப் பிள்ளையாரும் இல்லையெனினும்......குளக்கரைக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டீர்கள். அருமை! மேலும் தொடருங்கள். :cheers
குளக்கரை விடியலுடன், வரவை பதித்து கவிதையில் கருத்தை, பதித்த விதம் நன்று எஸ்எம். வாழ்த்துக்கள். சீக்வெண்ஷியல் திண்கிங் அபாரம்.
ஜெயா சொன்னது போல் எனக்கு எங்கள் ஊர் குளத்தங்கரை போய் வந்த மாதிரி இருந்தது.sm பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள். இனி அமர்க்களம் தான்.வாழ்த்துக்கள்.
விடியலின் இதம் உங்கள் வரிகளில் அருமையான துவக்கம். உங்கள் வரவுக்கு மேலும் வர இருக்கும் வரிகளுக்கும் வாழ்த்துக்கள்.