குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்வதுபோல் குருப் பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குருபார்வையில் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம்; நம்பலாம். மீன ராசிக்கு வந்திருக்கும் குரு பகவான் அங்கு ஆட்சி பலம் பெற்று, தான் நின்ற இடத்தில் இருந்து 5-ஆம் பார்வையாக கடக ராசியையும்; 7-ஆம் பார்வையாக கன்னி ராசியையும்; 9-ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு. குருப் பெயர்ச்சிப் பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாக்கிக் கொள்ள பிரார்த்தனை, ஸ்லோக பாராயணம், பூஜை, பரிகார முறைகளைக் கடைப்பிடித்து ஆறுதல் அடையலாம்.
Thanks for this post dear. My DH has good belief in this Rasi news. Let me print and show it to him. He'll be happy.