தினந்தோறும் பலர் இல்லம் தேடிச் செல்கிறாய்! திகைப்புண்டு போகும்படி செயல் புரிகின்றாய்! திரை போன்ற எம் மாயை அதை அகற்றுகிறாய். திறமை உள்ளோராயினும் உன்னுள் ஒடுக்குகிறாய். தீராதோ ஆயுள்? எனச் சலிப்போரும் கூட வாராதே என்றே உனை வேண்டுகிறார்! போகாதே! என்று எவர் சொலினும் கூட, நில்லாதே அழைத்தவர் உன்னுடன் வந்திடுவார். நிலையாதே மனிதருடைய யாக்கை என்று, நீண்ட நெடுங்காலம் நீ உணர்த்தி வரினும், நிற்காமல் உழலும் எம் மடமையைக் கண்டு, நீ சிரித்தால் அதில் தவறே இல்லை எனினும், உனை ஏற்கும் அம்மாண்பு இன்னும் எமக்கு, வரவில்லை என்பது தான் எம் நிலை என்று, நன்கறிந்தும் தொடர்கின்ற இறையே உமக்கு, வந்தனை சொல்வோம் கரம் குவித்தே நின்று. -ஸ்ரீ
You are right Devapriya. But, right now I am not into any kind of trouble Thanks for your feedback. -rgs
காலதேவனின் முன்பு நாம் அனைவரும் ஒன்றே!! எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் அவன் வேலையை அவன் செய்கிறான்!! உண்மையை உணர்த்தும் கவிதை மிக அருமை!!
Dear RGS, I loved and liked the below lines. We should not forget the ALMIGHTY in any situation. HE knows how to heel our pain or to reduce our pain.:thumbsup உனை ஏற்கும் அம்மாண்பு இன்னும் எமக்கு, வரவில்லை என்பது தான் எம் நிலை என்று, நன்கறிந்தும் தொடர்கின்ற இறையே உமக்கு, வந்தனை சொல்வோம் கரம் குவித்தே நின்று.