இடையில் ஒரு நான்கு முழத் துண்டு, முகத்தில் கனிவான புன்னகை உண்டு. வெள்ளையரை விரட்டும் வழி இதுவே என்று தேர்ந்தெடுத்ததை பலர் இன்றும் வியப்பதுண்டு. எதனாலே பெரும்புகழும் அடைந்தீர் என்று பல நாடுகளில் இருப்போர் திகைப்பதுண்டு. உம் செல்வமோ அறிவோ காரணம் அன்று. மக்கள் பின்தொடர வேறு காரணம் ஏதென்று வினவியவருக்கெல்லாம் விடை கிடைத்தது பின்பு. உம் எளிமையும், நேர்மையும் முதற் காரணமென்றும், பொதுவாழ்வில் தூய்மையும், சிக்கனமும் கொண்டு மத நல்லிணக்கமும், இறையுணர்வும் சேர்ந்தும், வேலை எதுவென்றாலும் முனைந்து உடன் முடிக்கும், சோதனைகளை முன் நின்று எதிர்க்கும் துணிவும், சாதனை பல செய்தாலும், வியக்கத்தக்க பணிவும், மீதி காரணங்கள் என்றே அவர் தெளிந்தார் நன்றே!