கண்ணனின் குழல்கொஞ்ச ராதையின் விழி மூட நெஞ்சினில் விளையாடும் அனுராகமே! இன்பத்தில் இதயங்கள் இணைந்த பொழுதிலே எழுந்தது புது மோகமே! தண்ணீரில் கரைத்திட்ட சந்தனம் போலவே குழைந்தது என் உள்ளமே! தவிக்கின்ற என்நெஞ்சின் தாபம் தீர்த்திடவே அருகினில் வா செல்லமே!