1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவியும், காதலியும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 15, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    முடிவில்லாக் கவிகள் தோன்றி மறைகின்றனவே,
    இணையில்லா உன் அழகுருவைக் கண்டவுடனே!
    இனியெல்லா நாட்களும் நானுனை நினைப்பதற்கெனவே
    தடையில்லாது கழித்திடுவேன் நான் என்றவுடனே

    பொய்யாலே மலை போன்ற மாளிகை எழுப்பி,
    மெய் போலே உருக்கமுடன் எடுத்துரைத்தீரே!
    நெய் போலும் சுவை கூட்டும் உவமைகள் போட்டு
    பெய்மழை போலே கவிதைகள் பலவும் பொழிந்தீரே!

    கல்லாகத் தோன்றுகின்ற பெண்ணவள் கூட
    நில்லாது புகழுகின்ற உமக்கு முன்னாலே
    தள்ளாடிப் போவாள் எனில் நானும் கூட,
    கள்ளேறிப் போவதிலே வியப்பொன்றுமிலையே!

    எனக் கூற, அவள் பதிலில் நானும் மயங்கி,
    களிப்பேற, என் கண்களும் சற்றே செருகி,
    புதுக் கவி ஏற்றி உடனடியாய்ப் பாடி முடிக்க,
    பொல்லாக் கவி நீரே! என்றாள் என் அகமகிழ!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அவளகம் இன்புற அன்சொல்லால் தந்தீர்
    கவிதை அதை
    க்கேட்ட காதலி தங்கள்
    செவிக்கு விருந்தளித்தல் நன்று



    கவியும் காதலியும் மிகவும் அருமை ஸ்ரீ.......
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Raman. -rgs
     

Share This Page