ஏற்றி விட்ட ஏணி கீழே நின்றிருக்க மேலே ஏறியவன் ஏணியை பார்த்து ஏளனம் செய்தான் அவனை கண்டு ஏணியும் சிரித்தது நான் நின்றதாலே நீ மேலே சென்றாய் இல்லையெனில் உன் நிலை என்னவோ என்று சிரித்தது மேலே சென்றதால் உயர்ந்தவனும் அல்ல கீழே நிற்பதால் தாழ்ந்தவனும் அல்ல அவரவர் அவரவர் இடத்தில் இருந்தால் தானே வரும் சிறப்பு
ஏணியை,பற்றி எண்ணுகையில் ஆசிரியரையும் மனதில் கொண்டுவருவோம். ஏற்றிவிட்ட ஏணி,அசையாமல் நிற்பதனால்,கைப்பற்றி உயர்ந்தனர் மாணவர். உங்கள் கவிதை மிகவும் அழகு.