உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உணர்ந்து உரைத்திட்டால், உரைத்திட்டதை உணர்ந்து உள்ளபடி உள்ளது உள்ளத்துள் ஊடுருவும், உள்ளத்தில் ஊறு உருவாகாதிருக்கும் உறவும் ஊரும் உயர்ந்து உன்னதமாகும்...
உள்ளத்தில் உள்ளது உள்ளபடி உளப்படுத்தினால் உரை கல் நீயாவாய் உளப்படுத்தி,உன் உள்ளரங்கம் உணர்ந்து நீ உண்மை பகர்ந்தால் உன் அகம் /உலகம் உனதாகும். உன்னதமாகும். உஷ் .அப்பாடா.ஒரு உள்ளத்தை வச்சுக்கிட்டு என்னா ஒரு அலம்பல்/அலசல்.... நச்சுன்னு இருக்கு நண்பரே. ஆமா உங்க ஊரு எப்படி இருக்கு ..அதுக்கு எந்த ஊறும்(பங்கமும்) இல்லையே...
ஊருக்கு ஊறு உண்டென்பர் உடையோன் உண்டெனில்.... சந்தோஷமா சரோஜ்? இததான எதிர்பார்த்தீங்க? அலம்பல் இல்லை அப்படீனா புலம்பலான்னு கேப்பீங்களே?
இந்த உள்ளமும , நாங்களும் உங்க கிட்ட படர பாடு இருக்கே :rotfl:rotfl இரு முறை படிச்சேன் புரிய...அருமை தோழரே வார்த்தை தேர்வு அருமை நல்ல ஜாலம் காட்டறீங்க :thumbsup
உங்களுக்கு ஒரு உள்ளம் தானே!!! இல்ல ஒரு சந்தேகத்தில கேட்டேன்!!! Even I have to read the last line couple of times... :bonk
உள்ளத்தில் உதித்ததை உத்தித்தவாறே சொல்வதிலும் ஊறு உண்டு என்பதை உணர்ந்தவள் நான் ஊறின்றி உணரும் உள்ளங்களிடையே வேண்டுமானால் நீங்கள் சொல்வது சாத்தியம்.