உன் குறும்பு பேச்சை கேட்கையில் உளமார்ந்த சிரிப்பும் என்னை பைத்தியக்காரியாக காட்டுகிறதே அன்பான உன் சிரிப்பில் எந்த கவலையும் அர்த்தமற்று போகிறது நம் இனிமையான உரையாடலில் சுவையான உணவும் ருசியற்று போகிறதே உன்னோடு நான் இருக்கும் பொழுதுகளில் உன் பார்வையில் என் வெட்கமும் கரைகிறதே கோபமோ கண்ணீரோ பாசமோ காதலோ நமக்குள் மறைக்க ஏதுமில்லை உன்னோடு இருக்கும் வரை மட்டும் என் உயிர் இருக்க வேண்டுகிறேன்