இயற்கை முன் நாம்! தாம்தான் உலகைத் தாங்குவது போன்று, பலர் தம் மனத்தில் எண்ணுவது, உலகில் மிக இயல்பு! தம் பெரும் பொருள், நகைகள் என்று வங்கிகளில் தாம் சேர்த்து மகிழ்வதும் கூட, இந்த உலக நடப்பு! ஒரு கணமேனும் சிந்திப்பாரா, இவற்றின் நிலை, ஒரு நிமிடம் பூமி அதிர்ந்தால், என்னவாகுமென! புதைந்த பூமிதனில் எதைப் போய்த் தேடுவார்? சிதைந்த தம் வீடுகளில் எப்படிப் புகல் நாடுவார்? ஆண்டவனின் அருள் உள்ளவரையே, நமது ஆட்டம்! ஆண்டவன் தண்டித்தால், வந்துவிடும் திண்டாட்டம்! முற்பிறவியில் செய்த நல்வினையால், நல்வாழ்வு! இப்பிறவியில் செய்வோம் நல்வினையே, மறவாது! :bowdown