சில சில சோகம் தினம் தினம் துரோகம் பலப்பல கோபம் புது புது பாவம் மனம் போல் தினமும் வாழ்ந்திட தானே மண் மேல் மரமாய் ஏங்கினேன் நானே!! என் எண்ணம் சொல்லிட வார்த்தைகள் இல்லை வார்த்தைகள் போல வாழ்கையும் இல்லை தனிமையில் அழுது அழுகையில் தொழுது மாற்றங்கள் வேண்டி தோல்விகள் தீண்டி மண்ணாய் வாழ்கிறேன் தினமும் ஏனோ வீழ்கிறேன்!! இனி உலகம் எனை மறந்து போகுமா? இல்லை இதுவும் ஒரு நாள் கடந்து போகுமா!! ------ நிரஞ்சன்
நல்ல வரிகள் நிரஞ்சன். இதுவும் கடந்து போகும் என்பார் எப்படி அதனைச் சொன்னாரோ? என் நிலையில் அப்படி ஒருவர் சொல்வார் என்றால் அதுவே வியப்பன்றோ? என எண்ணி எண்ணி, தளர்ந்தே போகும் மனமே! பயமே வேண்டாமே! உன் துன்பம் உன்னை உயரத்தில் வைக்கும் நாளும் தொலைவில்லை தானே! வஞ்சகம், கபடம், ஏமாற்று, பொறாமை முதலியன எல்லாம், உன் பொறுமை, அன்பு, முயற்சியின் முன்னே தூளாகும்! நிச்சயம் நீ வென்றிடலாம்! விடியும் எனும் நம்பிக்கையில் தானே ஒவ்வொரு இரவும் கழிகிறது! வெல்வோம் என்றோ நிச்சயம் நாமே! என்றே மனம் சொல்லிக் கொள்கிறது!