1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆனந்த ஜோதி பரவட்டும்…

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jan 25, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஆனந்த ஜோதி பரவட்டும் ...

    ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை;
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!’

    வண்ணத்திரை இசை வரிகளேயானாலும்
    கண்ணெனப் போற்ற வேண்டிய உண்மை வரிகள்!

    வெந்ததைத் தின்று, சோர்வுடன் உறங்கி,
    இந்திரியங்களை அடக்கினேன் எனச் சொல்லி,

    புன்சிரிப்பும் இல்லாமல், அன்புமொழி பேசாமல்,
    உன்மத்தர் போல் வாழ்வது என்ன வாழ்வு?

    தனி மரம் தோப்பாகாது என நன்கு உணரவேண்டும்;
    இனி வரும் நாட்களில் ஆனந்த ஜோதி பரவ வேண்டும்!

    உற்ற துணையுடன் நட்புடன் பழகவேண்டும்;
    குற்றம் குறை மறந்து இனிதாய் வாழ வேண்டும்!

    ஒரே போல ஒரே கையில் ஐந்து விரல்களே இருக்காது!
    ஒரே போல நற்குணத்தை எவரிடமும் காண இயலாது!

    ஒரே காசில் பூவும் தலையும் உள்ளது – அதுபோல
    ஒரே மனிதனுள் குணமும், கோபமும் உள்ளது!

    குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்கக் கொளல் – என்பது வள்ளுவம்!

    சுற்றம் என்பது ஆண்டவன் நமக்கு அளிப்பது – அதன்
    குற்றங்களை மறந்திடுவோம்! குணங்களைப் போற்றிடுவோம்!

    குணம் போற்றிக் குற்றம் மறந்து வாழ்ந்தால்,
    கணம் கூடத் துன்பம் நம்மை வந்து தீண்டாது!

    எத்தனை ஆண்டுகள் வாழ்வோமென எவருக்கும் தெரிவதில்லை!
    அத்தனை ஆண்டுகளும் அன்புடன் வாழாவிடில் பெருமையில்லை!

    தனிமைதான் மனிதனின் எதிரிகளில் மிகப் பெரிது;
    தனிமையில் இன்பம் கண்டால், மீண்டு வருதல் அரிது!

    சுற்றத்தார் நலம்தானே முதன்மையான இன்பம்!
    சுற்றத்தாரை வருத்தி நின்றால் வந்திடுமே துன்பம்!

    ஏற்றத்தாழ்வு எல்லோர் வாழ்விலும் வருவது உண்மை!
    குற்ற உணர்வின்றி அதை ஏற்று வாழ்தல் திண்மை!

    இல்லத்தில் இன்பம் பெருக, இன்முகமே முதன்மை!
    இல்லத்தரசி நல்லுடையில் இன்முகம் காட்டுதல் கடமை!


    உலகம் உய்ய வேண்டும்,
    ராஜி ராம் :) :thumbsup
     
    Loading...

Share This Page