ஆசை ! அழகிய கண்கள் உன்னை போன்றாம் குவிந்த இதழ்கள் உன்னை போன்றாம் சிவந்த கன்னங்கள் உன்னை போன்றாம் மலர்ந்த இதயம் உன்னை போன்றாம் என்றும் கவிஞரின் கற்பனைக்கு உகந்தவளாம் நீ ! உள்ளத் தூய்மையில் உன்னை போன்றே சேற்றில் தோன்றினும் நீரின் மேல் எழுவதில் உன்னை போன்றே மெல்லிய மனதிலும் உன் இதழ்கள் போன்றே நீரில் வாழ்ந்திடினும் நனையாத உன் இலை போன்றே எட்டி இருக்கும் கதிரவனை கண்டு மலர்வதிலும் உன்னை போன்றே அழகாய் மலர்ந்து அலங்கரிப்பதிலும் உன்னை போன்றே இன்றே தாமரையாய் மாறிட ஆசை ! Sharing for World Poetry day
வாசமிகும் பாக்கள் பல புனையும் பூம்பாவாய்... தேச எல்லை கடந்து எங்கள் உள்ளம் தொட்டாய் உம்பாவால்....! மணக்கட்டும் உம் பண்பு... தொடரட்டும் உம் தொண்டு....
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை .அதிகம் பாசம் வைத்து பாழாப் போன ஜன்மம் நான் .மற்றவற்றில் பற்று இல்லை .ஆனால் பாசம் எனும் வலை என்னை சுருட்டி விட்டது .