அவள் தாலாட்டும் தாயும் அவள் உறவாடும் தாரமும் அவள் விளையாடும் தமக்கையும் அவள் உடன்வரும் தோழியும் அவள் கவிதையாய் மகளும் அவள் கவிதைக்கு கருவும் அவள் இருந்தும் அவளை கொல்ல எத்தனை எத்தனை காரணங்கள் .... கல்வி கற்க விருப்பம் தெரிவித்ததற்காக தான் விரும்பிய ஆடையை அணிந்ததற்காக தான் விரும்பிய வாழ்க்கையை தேர்நதெடுத்ததற்காக தான் விரும்பாத ஆடவனை ஒதுக்கியதற்காக தலைக்கவசம் அணிய தவறியதற்காக மற்றவர்களின் சந்தேகங்களுக்காக இன்னும் தெரியாமல் செய்த தவறுகளுக்காக என்றும் செய்யாத குற்றங்களுக்காக மொத்தத்தில் பெண்ணாய் பிறந்ததற்காக இதில் பெண்களை போற்ற மங்கையர் தினமாம் ... உயிரோடும் மரியாதையோடும் வாழட்டும் பெண் இனம் ...
@jskls லக்ஷ்மி தாமதமான பின்னூட்டம் .பெண்ணை பெண்ணாக வாழ விட்டாலே போதும் .வேறு எந்த சிறப்பும் அவளுக்கு வேண்டாம் .நல்லதொரு கவிதை .உண்மையை நல்கும் கவிதை
அவள் படைப்பில் நல்ல படைப்பு - கவிதையும் அவள் அவளாக இருப்பது அவள் கையிலா அல்லது ஆண்கள் ஆளும் சமூகத்தின் கைகளிலா? அவள் ருசியான அவலாக இருத்தல் நன்று, ஊதினால் பறக்கும் அவலாக அன்று.