கன்னத்திலும், கைகளிலும் பல வண்ணக் கிறுக்கல்கள் உடையிலே ஆங்காங்கே உணவுப் பொருள் கறைகள். இயல்பு நிறம் மாறி, சற்றே கறுத்திருந்த பாதங்கள், உறக்கத்திலும் மாறாத புன்னகைக்கும் அதரங்கள், ஆழ்ந்ததொரு அலுப்பு எங்கும் பரவி இருந்த முகம், ஆங்காங்கே முடிச்சிட்ட ஆரம் கொண்ட கழுத்து, சற்றே ஒருக்களித்துப் படுக்கும் அந்த சுகம்! சற்றேனும் தொய்விலாது இருந்த உடல் அமைப்பு, ஆதுரத்துடன் குழவியை அணைத்தபடி உறங்கும், ஆலயமென வீட்டினை ஆக்கி வைத்து உலவும், அவளும் ஒரு குழந்தையோ? என எண்ணும் விதமாய், அசைவிலாது உறங்கியவள் அசைந்தாளே மெதுவாய்.
MIga Azhaghana Kavidhai!! Mighavum Rasithen!!! Avvappodhu Il varum enaku idhu oru iniya thooral.. inge varumbothellam ..Ini naan eppodhum ungal kavidhaigalai theduven..
Very glad to receive your appreciative feedback, SaviethaRajaram. Happy to receive a first and thanks a lot. -rgs