அவன் : கண்கள் என்னக் கருவண்டோ ? கன்னல் மொழிக் கற்கண்டோ ? மின்னல் ஒளிப் புன்னகையோ ? பெண் முகம் பௌர்ணமியோ ? காந்தள் மலர்க் கைவிரலோ ? மொந்தைக் கள் கனியிதழோ? பூந்தளிர் தான் பொன்னுடலோ? விந்தைகளில் முதல் இவளோ ? மேகம் பொங்கும் குழலழகோ ? இராகம் கொஞ்சும் குரலழகோ ? மோகம் கொள்ளத் தூண்டுகின்ற தேகம் இவள் தனியழகோ ? சங்கை ஒத்தக் கழுத்தழகோ ? மங்கை தோள்கள் மென்னழகோ ? கொங்கை தாங்கும் இடையழகோ ? நங்கை கால்கள் நடையழகோ ? தோடு தங்கும் செவியழகோ ? ஈடே இல்லாச் சொல்லழகோ? ஓடும் மானைப் பின்தொடர்ந்து நாடிச் செல்லுமென் மனதோ ? அவள் : தேர்வெழுதும் மாணவன் போல் வார்த்தை நன்று வடிக்கின்றீர் ! பார்வை அம்பால் துளைக்கின்றீர் ! சேர்த் தணைக்கத் துடிக்கின்றீர் ! எல்லை கொஞ்சம் மீறினாலும் தொல்லை என்றுக் கருதவில்லை ! கல்லிதயம் கனியச் செய்தீர், இல்லை என்றும் சொல்லவில்லை ! நானும் உம்மை விரும்புகின்றேன் ! தானாய்க் காதல் அரும்புகின்றேன் ! ஆனபோதும் நாணம் கொண்டேன் ! தேனைத் தர யோசிக்கிறேன் ! காதல் சொல்லும் என்னவரே ! பேதை என்னை வர்ணித்துப் பாதத்தோடு கேசம் வரை ஓதி விட்டீர் கம்பரஸம் ! தேதியொன்றை நாம் குறித்துப் பாதியென்று ஆகும் நாளில், காதல் பாடம் சொல்வதற்கே மீதி கொஞ்சம் வைத்திருங்கள் ! ( ) Regards, Pavithra
Lol. Very funny and beautiful poem. I was wondering wow, how expressive the guy had described the girl and was in awe. Then came the fantastic reply by the girl. Good poem. Thanks for sharing. Vaidehi
@vaidehi71, @kaniths , @jskls , @periamma , @Suja9 - விருப்பம் தெரிவித்தமைக்கும் , பின்னூட்டம் அளித்தமைக்கும் மிக்க நன்றி !
ஆமாம் பெரியம்மா ! அனுபவித்தே எழுதினேன் ! என் சொந்த அனுபவமல்ல ! (அதற்குக் கொடுத்து வைக்கவில்லை ! ) சில இந்தக் காலக் 'காதல் காவியங்களைப்' பார்த்து எழுதினேன் ! தீபாவளிக்குத் தயாராகி விட்டீர்களா? ஒரு வாரமாக ,என் சமையலறையில் தினம் தினம் தீபாவளி தான் !
ஆஹா லக்ஷ்மி , மூன்று முறை என்னை அழகு என்று சொன்னதற்கு நன்றி ! நன்றி ! நன்றி ! ( அடிப்ப(பா)வி நான் எப்போ இவளை அழகுன்னு சொன்னேன்னு நீங்க நினைக்கற 'மைண்ட் வாய்ஸ் ' எனக்குக் கேட்டுருச்சு ! ஹா..ஹா..ஹா.. ) Jokes apart, Thank you dear ! உங்களோட தீபாவளி ஸ்பெஷல் என்னவோ ?
Me too LOL, Vaidehi ! Some guys (definitely not my guy ) really become poets when in Love. Thank you for the appreciation. Happy Deepaavali !
பவித்ரா தீபாவளி ஸ்பெஷல் ஒன்னும் கிடையாது .காலையில் எழுந்து உளுந்து வடை,பருப்பு வடை ,அதிரசம் ,சுகியன் செய்வேன் .இந்த வருஷம் நாங்க ரெண்டு பேர் மட்டும் . .சுவாமிக்கு படைப்பதற்கு வடையும் அதிரசமும் செய்ய வேண்டும் .மாய்ஞ்சு மாய்ஞ்சு பலகாரம் செய்த காலம் எல்லாம் போய் விட்டது .உங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்