தாயும் தந்தையுமாய் நானிருப்பேன் என்றாய் ! நீயுமேன் எமைத் தனியில் நீங்கியேச் சென்றாய் ! வாய் வார்த்தையிலும் கவனம் வைக்கச் சொல்வாய் ! நோய் இருப்பதைச் சொல்லாமல் மறைத்தேன் வைத்தாய் ? பார்த்துக் கொள்வேனென்று தெரிந்தே தான் சென்றாயோ ? நீர்த்துப் போகாளென்றென் மேல் நம்பிக்கைக் கொண்டாயோ ? ஆர்த்தெழுமுன் நினைவலைகள் நெஞ்சிலுள்ள காலம் வரையில் சேர்த்தணைத்துச் செல்லுவேன் நீயும் விட்டுச்சென்றிட்ட விழுதினையே ! Regards, Pavithra
உண்மைதான் லக்ஷ்மி ! மற்றுமோர் ஆண்டு கடந்து செல்லும் போது எழும் ஒரு பெருமூச்சின் வெளிப்பாடு தானிது. ஆறுதல் வார்த்தைக்கு நன்றி !
உண்மை தான், பெரியம்மா. வருத்தமில்லை. ஒரு வித வெளிப்பாடு. ஆதரவிற்கு நன்றி ! ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ ? அவரவர் விதி முடிந்தால் போக வேண்டியது தான்.. நடக்கும் போது காலிடறிக் கீழே விழுந்த குழந்தை, யாராவது பார்த்தால் அழும்,இல்லையெனில் தட்டிக் கொண்டு தானே எழுந்து விடும். அது போலத்தான் நமக்கு வரும் துக்கங்களும். அதைப் பெரிது படுத்திக்கொண்டே இருந்தால், ஆறுதல் தேடிக் கொண்டே இருந்தால், அது நம்மைப் போட்டு அழுத்திக் கொண்டே இருக்கும் .வெளிவரவே இயலாது. எல்லோருக்கும் உண்டானது நமக்கும் என்றுணர்ந்து விட்டால், நிம்மதி . பின்னூட்டத்திற்கு நன்றி !