இயற்கை இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டு சாய்பாபா இயற்கை இயக்கங்களைக் கூட ஆணையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டு சாய்பாபா திகழ்ந்துள்ளார். ஒரு சமயத்தில் சாய்பாபாவின் தரிசனம் பார்த்துவிட்டு ஒரு பக்தன் கிளம்ப அப்போது பார்த்து நல்ல மழையும் புயலும் பிடித்துக் கொண்டு பேயாட்டமாடின, பம்பாய்க்கு உரிய நேரத்தில் திரும்பிப் போக முடியாமல் ஆகிவிடுமோ என அந்த பக்தன் பதறிப் போனான். சாயிபாபாவிடமே திரும்பிப் போன அவன் நிலமையைக் கையாள அவரிடம் அறிவுரை வேண்டினான். வானத்தை நிமிர்ந்து பார்த்த அவர் சொன்னவை; "அர்ரே, அல்லா, போதும், மழையை நிறுத்து, என் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிப் போயாக வேண்டும், எந்த கஷ்டமும் படாமல் அவர்கள் திரும்பிப் போகட்டும்". சாய் பாபா பேசியது போலவே மழை மறைந்து சிறுசிறு தூறல்களாகி விட எவ்வித பிரயாண சிரமுமின்றி வந்த பக்தன் கிளம்பிப்போனான்.
பாபா மீது துளி சந்தேகமோ அல்லது ஒளிவு மறைவுகளோ வேண்டாம் எவனொருவன் தன்னையும் தன் ஆன்மாவையும் பாபாவின் பாதக் கமலங்களில் அர்ப்பணித்து அவரிடம் சரணடைந்து விடுகிறானோ, அவனுக்கு வேறெந்த தேவையும் எழாது. பிறகு, அவனுக்குப் படித்தறிய வேண்டும் என்ற நிலை வராது. இதிகாசங்கள், வேதங்களெல்லாம் படித்துத் தான் பல்கிப் பெருக வேண்டும் என்ற தேவை எழாது. மாயப் பொருட்களின் மீதான ஆசையோ தேவையோ கூட உதயமாகாது. அவனது அனைத்துத் தேவைகளையும் பாபாவே பார்த்துக்கொள்வார். அவனைப் பாதுகாப்பார். ஆன்மீகப் பாதையின் ஆன்ம இலக்கினைத் தொட வழிவகை செய்து வைப்பார். ஆனால் அது பாபாவின் மீது முழு அர்ப்பணிப்பாய் இருத்தல் வேண்டும். பாபா மீது துளி சந்தேகமோ அல்லது ஒளிவு மறைவுகளோ பக்தனிடம் இருந்து விட்டால், சொல்லப்பட்ட பலனில் எதுவும் கிடைக்காது. என்பால் ஐயமற்ற அன்பு செலுத்தி உருகும் பக்தர்களுடைய வாழ்வின் மீது என்னுடைய மேற்பார்வையும், நான் தரும் பாதுகாப்பும் எப்போதும் இருக்கும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா.
ஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தன்னைத்தானே முதலில் பொறுத்திக் கொள்வார் அவர். தனது பக்தர்களுக்கு சாய்பாபா சொல்வார்; " நீ ஒரு ராம பக்தனாயிருந்தால், அதை விட்டு விடாமலிரு. உனக்கு அல்லா மட்டுமே போதுமென்றால் அதையே கெட்டியாகப் பிடி."
What is new in the world? Nothing. What is old in the world? Nothing. Everything has always been and will always be. Sai Baba
What is new in the world? Nothing. What is old in the world? Nothing. Everything has always been and will always be. Sai Baba
நினைத்தது நடக்கும் இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். - ஸ்ரீ குரு சரித்திரம்.
எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும் நான் எப்போதும் உன்னுடனேயே தான் இருக்கிறேன். நீ கவலைபடத் தேவையில்லை. எத்தனைக்கெத்தனை நீ இப்போது கஷ்டங்களை அனுபவிக்கிறாயோ அத்தனைக்கத்தனை எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா. ( பாபா தனது பக்தர் உபாசனி பாபாவிடம் கூறியவை )