அந்த ஐந்து வயது சிறுமி வானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் .அவள் அம்மா அருகில் வந்து ஏம்மா இப்படி இருக்கேன்னு கேட்டாள் .அதற்கு அந்த சிறுமி அம்மா இன்னிக்கு தந்தையர் தினம் . .எல்லாரும் அவங்க அப்பாக்கு கிப்ட் குடுக்றாங்க .ஆனா எனக்கு அப்பா இலையே மா .அதான் கஷ்டமா இருக்குன்னு சொன்னாள் .அவ அம்மா ஒரு கேள்வி கேட்டாள்.இந்த உலகத்துக்கே அப்பா யாரும்மா .கடவுள் தானே .அப்பா அவருக்கு நாம போய் கிப்ட் குடுப்போம்னு சொன்னதும் அந்த சிறுமி கை தட்டி சிரித்தாள் .உடனே தன் வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கிருக்கும் பூக்களை பறித்து கொண்டு வந்தாள்.வீட்டில் உள்ள சாமி படத்தின் முன் பூக்களை வைத்து விட்டு கண் மூடி வேண்டி கொண்டாள்.சாமி என்னை போல எத்தனையோ பேருக்கு அப்பா இல்லை அதனாலே நீ எல்லாரையும் உன் பிள்ளைகளா நெனச்சு காப்பத்தனும்னு கோரிக்கை வைத்தாள்.இறைவனும் இந்த குழந்தையின் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார் .
அன்புள்ள பெரியம்மா, தாயின் சமயோசித புத்தி குழந்தையின் வருத்தத்தைப் போக்கியது. மற்றும் தந்தையை இழந்த மற்ற குழந்தைகளுக்காகவும் இறைவனைப் ப்ரார்த்திக்கச் செய்தது. புஷ்பவல்லி