புது மங்கையாய் சாதிக்க பிறந்தவளே சோதனையும் சாதனையாய் மாத்தும் தாரகையே உந்தன் வரவு மண்ணிற்கு புதிய எழுச்சி நீ செய்யும் ஒவ்வன்றும் நன்மையின் புரட்சி மங்கையராய் நீ பிறக்க என்ன தவம் செய்ததது இந்த அழகிய வையகம் வீட்டிலே முடங்காமல் உலகையே உன் கைக்குள்ளே அடக்கும் ஆற்றலால் அனைவரையும் அசர வைத்தவளே சமையலிலே பல வித ருசியும் கலையிலே எண்ணிலடங்கா பல்கலையும் விளையாட்டு துறையுளும் கணினி வளர்ச்சியுளும் நாட்டின் பொறுப்பில் இருக்கும் அரசியல் கடலிலும் மூழ்கி முத்தெடுத்துவலே தைரியத்தில் நீ ஒரு ஜான்சி ராணியடி ஊரை காக்கவும் களவுகளை தடுக்கவும் காவல்துறையிலும் ராணுவத்திலும் கப்பல்துறையிலும் விமானபடையிலும் நீ எட்டிய இமயம் பிரம்மிக்க வைக்கிறது இன்றும் கட்டிடங்களையும் வடிவமைக்கிறாய் உந்தன் அழகையும் சிலை வடிக்கிறாய் ஓவியமும் தீட்டுகிறாய் நல்ல காவியமும் கவிதையும் படைக்கிறாய் திரைப்படமும் எடுக்கிறாய் கதையும் எழுதிகிறாய் சேவையின் உருவே தாய்மையின் உறவே சாந்தத்தின் ஸ்வரூபமே அன்பினாலும் நல்ல பண்பினாலும் நீ மலர்கிறாய் நீ இருக்கும் இடத்தில் வானவில்லின் வர்ணஜாலங்கள் குடிபுகுந்து வண்ணமயாக்குகிறது நீ அனைத்து துறைகளிலும் வைரமாய் ஜொலிக்கிறாய் மங்கையாய் நீ பிறந்து இந்த உலகையே பெருமையடைய செய்கின்றாய் மங்கையர் தின வாழ்த்துக்கள் தோழிகள் அனைவருக்கும்
superb... nice .... :thumbsup engalukkaga dedicate pannunathukku romba thanx chitra.. innum neenga niraya ezhudha enathu vaazhthukkal... happy womens day!!
மங்கையராய் பிறந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவோம். கவிதை மிக நன்று டா. உனக்கும் என் வாழ்த்துக்கள் :thumbsup