சேற்றில் கையை வச்சு நாற்று நட்டு களை பிடுங்கி பயிர் வளர்த்து சோறு போடறவன் ஒன்னும் தெரியாத அறிவிலிகள் பசு மாட்டின் மடி வலிக்க பால் கறந்து குடிக்க குடுப்பவன் பாமரன் பால் குடிப்பவன் மேதாவி கட்டுக் கட்டாக பணம் இருந்தாலும் நோட்டுகளை உண்டு பசி ஆற முடியாது பத்து பருக்கை சோறு போட்டு அது மேல் நீர்த்த மோர் ஊற்றி சாப்பிட்டால் வயிற்றுப் பசி அடங்கும் பெண்களை பாதுகாக்க சட்டம் உண்டோ? ஆற்று தண்ணீரை பாதுகாக்க சட்டம் உண்டோ ? கொள்ளை அடிப்பவனையும் கோடிகள் சேர்ப்பவனையும் ஆயுள் முழுக்க தண்டிக்க சட்டம் உண்டோ? இதற்கெல்லாம் இல்லாத சட்டம் எங்கள் பண்பாடுக்கு இடையூறு செய்வதேன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளின் பொருள் தமிழகத்தின் தலைநகரம் தெளிவாக காட்டி விட்டது கண்மணிகளே
தமிழின் பெருமை அருமை நம் இளைஞர்கள் எழுச்சிகொண்டெழுந்து விட்டார்கள் ! அவர்கள் இதற்கு தீர்வு கொண்டு வருவார்கள் !