உண்மையை உறக்கக் கூறிடும் உத்தமனாகிய இவன் வாதாடுவதில் வரம் வாங்கி வந்த ரெகுமான் வெள்ளித்திரையில் முட்டை முழியுடனும் வெங்கலக் குரலுடனும் தமிழகத்தை முகம் மலரவைத்த முடிசூடா மன்னன் தமிழர்கள் கேட்டாலும் கேட்காவிடிலும் தன் எண்ணத்தை தவறாமல் பகிர்ந்திடும் சூரன் மன்னன் பெயரால் நடத்தும் ஏட்டின் மூலம் மக்களை விழித்தெழ வைக்கும் ஆசிரியன் பெய்யும் மழையை விவரிக்க சொல்லும் வார்த்தையை தன் பெயராய் கொண்டு புகழ் பெற்றவன்
-- இவன் வேறு யாரும் இல்லை முட்டைக்கண் ,மொட்டைத் தலை,முள் போல் குத்தும் வார்த்தை கொண்ட முடி இல்லை மன்னன் , சோ என்கிற ராமசாமி தான்.விஸ்வாமித்ரா
அருமையான கவிதை ஐயா, இவர் எழுதிய நாடகம், "யாருக்கும் வெட்கமில்லை" மிகவும் அருமையாக இருக்கும், ஐஏஎஸ் பாடப்பகுதியில் இதுவும் ஒரு பாடம் என்பதால், இந்த நாடகத்தைப் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது........நன்றிகள்
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா. நாடகம் அவர் வாழ்க்கையின் பெரும் பகுதி. அதைக் கூற மறந்துவிட்டேன். விசுவாமித்ரா