1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணதாசன் இறந்த போது வாலி

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Oct 19, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: கண்ணதாசன் இறந்த போது வாலி
    :hello:

    கவிஞர் கண்ணதாசன் இறந்த போது வாலி எழதினார்..
    `கண்ணதாசனே!–என்
    அன்பு நேசனே!
    நீ,
    தாடியில்லாத தாகூர்;
    மீசையில்லாத பாரதி!
    சிறுகூடற் பட்டியில்
    சிற்றோடையாய் ஊற்றெடுத்து –
    சிக்காகோ நகரில்
    சங்கமித்த ஜீவ நதியே!
    உனக்கு
    மூன்றுதாரப்மிருப்பினும் – உன்
    மூலா தாரம் முத்தமிழே !
    திரைப் பாடல்கள்
    உன்னால் –
    திவ்வியப் பிரபந்தகளாயின;
    படக் கொட்டகைகள்
    உன்னால் –
    பாடல் பெற்ற ஸ்தலங்களாயின;
    உன்னால்
    நீ
    ஆண் வேடத்தில்
    அவதரித்த சரஸ்வதி;
    கண்ணனின் கைநழுவி-
    மண்ணில் விழந்த
    புல்லாங்குழல்.
    அயல்நாட்டில்
    உயிர்நீத்த
    தமிழ்நாட்டுக் குயிலே!
    பதினெட்டுச்
    சித்தர்களுக்கும்
    நீ
    ஒருவனே
    உடம்பாக இருந்தாய்;
    நீ
    பட்டணத்தில் வாழ்ந்த
    பட்டினத்தார்.
    கோடம்பாக்கத்தில்
    கோலோச்சிக் கொண்டிருந்த
    குணங்குடி மஸ்தான் !
    நீ
    தந்தையாக இருந்தும் -
    தாய்போல்
    தாலாட்டுகளைப் பாடியவன்
    இசைத்தட்டுகளில் மட்டுமல்ல –
    எங்கள் நாக்குகளிலும்
    உன்
    படப்பாடல்கள்
    பதிவாகியிருக்கின்றன
    உன் மரணத்தால்
    ஒர் உண்மை புலனாகிறது
    எழுதப் படிக்கத் தெரியாத
    எத்தனையோ பேர்களில் –
    எமனும் ஒருவன்;
    அழகிய கவிதைப் புத்தகத்தைக்
    கிழித்துப் போட்டுவிட்டான்.
    இந்த கடைசி வரிகள் இன்று வாலிக்கும் பொருந்தும்…!
     
    maalti likes this.
    Loading...

Share This Page