யமதர்மன்:செவ்வாய் அன்று இங்கு வந்துள்ள புதிய மாது என்ன சொல்லியும் கேட்பதில்லை. அவர் யார் பேச்சையாவது கேட்பாரா? சித்ரா குப்தன்:-சென்னையில்' சோ 'என்று ஒருவர் இருக்கிறார். அவர் சொன்னால் மட்டுமே இம்மாது கேட்பார். யமன்: மிக்க நன்றி. நாளையே அவரை இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன் ஜெய்சாலா 42
திரு.சோ அவர்களின் பாணியிலேயே அவருக்கு அஞ்சலி ! அங்கதச் சுவை மன்னன். தேவைப்பட்டால் தன்னைத் தானே தலையில் குட்டிக் கொள்ள வெட்கப்படாதவர். துக்ளக் தர்பாரும் ஓய்ந்து விட்டது. வருத்தமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது, இரண்டு தைரியசாலிகளான, நல்ல நண்பர்களான ஜெ., மற்றும் சோ., இவர்களின் அடுத்தடுத்த மரணம். நல்ல ஆன்மீகவாதியாக அவரது ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.