பகவத் கீதையின் சுருக்கமே பகவான் கையில் உள்ள "மா.சு.ச". பகவான் கண்ணன் பகவத் கீதையில் "சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச" என்று அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்தார். என்னை நம்பி என் திருவடி நிழலில் வருவோரை ஒருபொழுதும் நான் கைவிடமாட்டேன். நிச்சயம் அபயம் அளிப்பேன் கவலைப்படாதே அர்ஜுனா என்று கண்ணப்பிரான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் தான் இந்த மா.சு.சு என்று அவர் குறிப்பிட்டார். பக்தர்கள் அனைவரும் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் அத்திவரதர் வலது உள்ளங்கையில் "மா.சு.சு" கவசம் பொருத்தப்பட்டது. சயன கோலத்தில் இருந்தபோது சரியாகத் தெரியாத இந்த எழுத்துக்கள், அத்திவரதர் நின்றகோலத்தில் வைக்கப்பட்டபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
`மாசுச' என்பது வடமொழிச் சொல்லாகும்.`மாசுச' என்றால் ‘கவலைப்படாதே’ என்று அர்த்தம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனிடம் கடைசியில் சொன்ன வார்த்தை இது. ‘மாசுசஹா’ என்று சொல்லியிருப்பார். `மாசுசஹா' என்பதைத்தான் `மாசுச’ என்று சுருக்கி அத்திரவரதரின் கையில் உள்ள கவசத்தில் பொறித்திருக்கிறார்கள். `மாசுசஹா' என்றால் ’எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று பொருள்'' என்றார்.
Heartfelt Thanks @Cheeniya Sir. 2. The text clarifies the surrender value. 3. I owe my thanks also to fellow member @EnlightenedSoul whose post has brought me here to seek the meaning for the letters appear on Palm of Atthi Varadhar. Regards.
Yes indeed. But in google images of O Perumal More letters are exhibited on Lord’s right palm. Thanks. Regards.