அர்விந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு வேளை, இந்த சந்திப்பு நடை பெற்றால் என்ன நடக்கும் என்பதை திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாத்திரத்தில் நம் மோடி அவர்களையும், நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் பாத்திரத்தில் கேஜ்ரிவாளையும் பொருத்தி பார்த்தேன். அந்த கற்பனை இதோ இப்போது. மோடி : கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா? கேஜ்ரி: எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும். மோடி : கேள். நான் பதில் சொல்கிறேன். கேஜ்ரி: பிரிக்க முடியாதது? மோடி : பாஜகவும் நாட்டுபற்றும். கேஜ்ரி: பிரிக்க கூடாதது? மோடி : தேசியமும், தெய்வீகமும். கேஜ்ரி: சேர்ந்தே இருப்பது? மோடி : ஆம் ஆத்மியும், அராஜகமும். கேஜ்ரி: சேராது இருப்பது? மோடி : கேஜ்ரிவாலும்,உண்மையும். கேஜ்ரி: சொல்ல கூடாதது? மோடி : உன்னிடம் ராணுவ ரகசியம். கேஜ்ரி: சொல்ல கூடியது? மோடி : தாமரைக்கு வாக்களியுங்கள். கேஜ்ரி: பார்க்க கூடாதது? மோடி : பயங்கரவாதிகளின் கொட்டத்தை. கேஜ்ரி: பார்த்து ரசிக்க? மோடி : மக்களின் முன்னேற்றம். கேஜ்ரி: கலையில் சிறந்தது? மோடி : உன் முதல்வர் நாடகம். கேஜ்ரி: நாடகம் என்பது? மோடி: ஆம் ஆத்மி கட்சி. கேஜ்ரி: நாட்டுக்கு? மோடி : பாஜக. கேஜ்ரி: காட்டுக்கு? மோடி: காங்கிரஸ். கேஜ்ரி: ஆட்சிக்கு மோடி: தேசிய ஜன நாயக கூட்டணி. கேஜ்ரி:துரோகத்திற்கு? மோடி : நீ. கேஜ்ரி: வலிமையான பாரதத்திற்கு? மோடி: ஆர்.எஸ்.எஸ். கேஜ்ரி:அழிவுக்கு? மோடி: நீ. கேஜ்ரி: அறிவுக்கு? மோடி: நான். கேஜ்ரி:ஐயா, ஆளை விடுங்கள். நீங்கள் சொல்வது தான் சரி.