1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirumanthiram

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Aug 27, 2013.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear All,

    This is a small thanks to the book author "Thiru. Siva Selvaraj", of the book "Manthira mani maalai".

    His aim is to make people aware of what is the true self and to experience it by directing them towards it...

    so is my small part in making this possible to reach many surrendering this to my guru's feet..(My Guru is Ramasamy ayya, Siva Subramaniyam Ashram, Bhadragiri).

    This is one of the greatest book that everyone should read to know about themselves very aptly.

    Since i've a baby now, not able to spend much time in transliterating.. so in my own pace will do, but i m sure, it's a boon for the needed souls...

    Happy day!
     
    Loading...

  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே - திருமந்திரம் - 81

    "இறைவன் என்னை படைத்ததே தன்னைப் பற்றி தமிழில் உரைப்பதற்கே" என கூறுகிறார்.

    "சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்" - திரு அருட் பிரகாச வள்ளலார்.

    நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் தன்னகத்தே கொண்டு மிகச் சிறந்த சாஸ்த்திர நூலாக விளங்குவது தான் திருமந்திரம்.

    ஒரு மனிதன் உயர்வடைய வேண்டும் என்றால் அவன் படிக்க வேண்டியது திருமந்திரம் என்றார் வள்ளலார்.

    முதல் தந்திரம்

    "ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
    வென்றவன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தாணுணர்ந் தெட்டே” பாடல் - 1

    ஒன்றவன் தானே - இறைவன் ஒருவனே.

    இரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவனே ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளிலும் துலங்குகிறார். நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில்!

    நின்றனன் மூன்றினுள் - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக வலது கண்ணிலும், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இரு கண்களும் உள்ளே சேரும் இடத்தில் அக்னிகலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்.

    நான்கு உணர்ந்தான் - நான்கு வேதங்களாகிய ரிக், யாஜுர், சாம, அதர்வண வேதங்களாக உணர்த்தப்படுபவனே இறைவன். அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழிமுறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்தக்கரணம் நான்கு வழி அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் வழி உணர வைத்து முக்தியை தருகிறது.

    ஐந்து வென்றனன் - ஐம்புலன்கள் இறைவன் வழி திரும்பினால் மட்டுமே பேரின்பம்.

    ஆறு விரிந்தணன் - நமது இரு கண்களாகி வெள்ளை விழி, கரு விழி, கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இரு கண் ஒளியாகுவும் துலங்குகிறார்.
    இரு கண் உள் ஆறு போல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார். நெருப்பாறு!

    ஏழு ஊம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ர தளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்.

    தான் இருந்தான் உணர்ந்து எட்டே - இறைவன் "தான்" சிறு ஒளியாக நம் உயிராக இருந்து ஆண்டு கொண்டிருக்கிறான். "தான்" ஆகிய இறைவன், "நான்" ஆகி என் உடலிலே கோயில் கொண்டு உள்ளான்.
    நாம் உணர்ந்து தான் அறிய முடியும். நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி "எடேயாகும்". எட்டு என்றால் எண்ணில் "8", எழுத்தில் "அ". நமது கண்களே எட்டு.

    அதை நீ எட்ட வேண்டும். எதற்கு? உள் இருக்கும் ஒளியான, ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே!

    இறுக பற்றிப் பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை. இறைவன் நம் கண்களில் ஒழியாக அந்த பரமனே இருப்பதை உணர முடியும்.

    உடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்
    கடம்பூர்வாழ் என்இரண்டு கண்ணே

    எத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் ! கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...!
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    “அவனை ஒழிய அமரரும் இல்லை
    அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
    அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
    அவனன்றி ஊர்புகு மாறறி யேனே” பாடல் – 6


    அவனை ஒழிய அமரரும் இல்லை – அவன் – சிவம் –பரமாத்மா – இறைவன் – ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன் தானே ஒளியாக துலங்குகிறார்! அப்படி இருக்க அவனன்றி யாரும் இல்லையே! எதுவும் இல்லையே! பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன? சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமே இல்லை. அவன் இன்றி யாருமே இல்லை!

    அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை – “அவன்” தான் இறைவன் – நம் உடலினுள் உயிராக – நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான். அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல். நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும்! வேரு என்ன செய்தாலும் பலனில்லை. அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் தவமே தவமாகும்! வேறு என்ன செய்தாலும் பலனில்லை! அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே அருந்தவம் ஆகும்! உண்மை ஞான வழி இது ஒன்றே!

    அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை – இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன், ப்ரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள்! அப்படியிருக்க வேருயாரால் என்ன செய்ய முடியும்? அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

    அவனன்றி ஊர்புகு மாறறி யேனே – அவனன்றி – இறைவனின்றி – அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் – நம் உடலினுள் புகுவது எங்ஙனம்? நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். இறைவன் இருப்பது நம் உடலூர்!

    உடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில்- பார்வை – துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார்! போக வழி எட்டாகிய விழிகளே! அறியுங்கள்! இதுவே உண்மை! இதுவே ஞானம்!

    This is my own comparative thinking:

    இது ஒரு பெண் தாய் தகப்பன் வீட்டில் வளர்ந்து, பின் கணவன் கைபிடிக்க, புகுந்த (மாமியார்) வீட்டிற்கு செல்வதற்கு சம்மாக உள்ளது.

    பெண் - இரு புர விழிகளில் உள்ள ஜீவ ஒளி!
    தாய் தகப்பன் வீடு – நம் இரு புர விழிகளே! (அ , உ ஆகிய இடம்).
    கணவன் – பரமாத்மா
    புகுந்த (மாமியார்) வீடு – அக்கினி ஸ்தானம் (ம – ஆகிய இடம்).

    அதனால் தான் மாமியார் கொடுமை உள்ளதோ? ;-)

    எப்போது (அ,உ,ம) ஆகிய மூன்று ஒளியும் ஒன்றாகிறதோ அன்றே நம் சிர உள் நடுவிருக்கும் ஜீவஸ்தானத்தை அடைவோம்.

    அதுவே முக்தி(ஆனந்த விடுதலை) பெண்ணாகிய ஜீவர்களுக்கு!

    பாரதியும் இந்த ஆனந்த விடுதலை பற்றியே பாடினார்.

    Thanks and regards,

    S. Sridevi Srinivasan.
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    “வணங்கி நின்றார்க்கே வழித்துணையாமே” – பாடல் – 28

    வணங்குதல் – இருகை கூப்புதல். இருகையை கூப்பி வணங்கி நிற்க சொல்லவில்லை! வலக்கை – வலது கண் - சூரிய கலை, இடக்கை - இடது கண் – சந்திர கலை, இவ்விருகைகளையும் - இருகலையையும் இணைப்பதே கும்பிடுதல் ஆகும். இது ஞானம்! இதுவே உண்மையான வணக்கம் ஆகும்.

    இரு கண் ஒளியை இணைத்து தவம் செய்பவர்க்கு வழிகாட்டியாக உள்ளிருக்கும் அந்த இறைவனே துணையாக வருவார்! அதாவது கண் ஒளியை உணர்ந்து தவம் செய்யும் போது உள் ஒளியெ ஈர்த்து நம்மை உள்ளே கூட்டிச் செல்லும். ஞான அனுபவ நிலை இது!

    “நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் நம்மை நோக்கி 10 அடி முன்னே வருவார்” என்று கூறுவோம் அல்லவா? இந்த தவ நிலையைத் தான் அங்ஙனம் கூறினார்கள்.

    நாம் இறைவன் இருக்கும் இடமாகிய கண் – திருவடிகளில் – ஒரு அடி –ஒரு திருவடியில் நின்றால் போதும்! இறைவன், எட்டும் இரண்டுமாகிய “அ” “உ” ஆகிய இரு கண்களிலும் எட்டும் இரண்டுமாகிய 10 அடியில் முன்னே வந்து விடுவார் என்றனர். ஞான அனுபவத்தை சொன்னதே இது!
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    “விதிவழி அல்லதில் வேலை உலகம்
    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
    துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
    பதிவழி காட்டும் பகலவ னாமே”
    பாடல் – 45

    விதிவழி அல்லதில் வேலை உலகம் – இந்த உலகத்தில் பிறந்த நாம் அனைவரும் பூர்வ ஜன்மங்களில் செய்த பாவ புண்ணிய வினைகளில் கொஞ்சமாக எடுத்து விதிக்கப்பட்டு தான் வந்தோம், இன்னின்ன வினை என எழுதிவிட்டான் ஒருவன்! இதுவே ப்ராப்தம் / பிராரத்துவ கர்மம் என்றும் தலைஎழுத்து என்றும் கூறுவர். சாமான்ய மனிதன் இதற்கு உட்பட்டே பிறந்து வளர்ந்து வாழ்ந்து செத்தும் போகிறான்.

    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை – விதிக்கப்பட்ட கர்மமே கொண்டு பிறக்கின்றபடியால் இன்ப துன்பம் கூடுதலோ குறைவோ இல்லை. ஞானிக்கும் உண்டு ப்ராரத்துவ கர்மம்.

    துதிவழி நித்தலும் சோதிப் பிரானும் - பக்தியால் இறைவனை துதித்து சதாகாலமும் இறை பணியில் ஈடுபடும் அன்பர்களை சோதியாகிய இறைவன் தடுத்தாட்க் கொள்வார். எவ்வகையிலும் ஞானம் அருள்வார். கைவிட மாட்டார்!

    பதிவழி காட்டும் பகலவ னாமே – பதியாகிய இறைவன் யார், எங்கே, எப்படி இருக்கிறார், நாம் எப்படி அடைவது என கூறுபவரே ஞான சூரியன் போன்ற சற்குரு ஆவார்.

    பதியாகிய இறைவன் இருக்கும் நம் உடலினுள் புக வழி சூரியன் என விளங்கும் நமது வலது கண்ணே ஆகும். பதிக்கு போக வழி பகலவன்!

    அதாவது இடது கண் சந்திரன், வலது கண் சூரியனோடு சேர்ந்து உள் புக, நம் சிர நடு உள்நடுவிருக்கும் அக்கினி கலையாகிய பதி இருக்கும் இடத்தை அடையும். இதுவே தவம்!

    எப்போதும் சூரிய கலையிலேயே நில்லு என வள்ளலாரும் இதையே கூறுகிறார்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    [FONT=&quot]கருக்குரு வாய்நின்ற கண்ணணும் ஆமே[/FONT][FONT=&quot]” பாடல் – 53[/FONT]

    [FONT=&quot]மனிதன் சைவ உணவு உட்கொள்பவனாக இருக்க வேண்டும்.. எந்த வித கெட்டபழக்கங்களும் இல்லாதவனாக இருக்க வேண்டும். இறைபக்தி உள்ளவனாக விளங்க வேண்டும். அப்படிப்பட்ட தூய ஆ[/FONT][FONT=&quot][FONT=&quot]ன்[/FONT]மாக்களுக்கே நல்ல ஒரு சற்குரு வாய்ப்பர்.
    [/FONT]
    [FONT=&quot]சற்குருவாயிலாக, உபதேசவாயிலாக மெய்ப்பொருள் நம் கண்கள் தான் என தெளிந்து தீட்சை பெற்று, கண்மணியில் உணர்வை பெற்று, அதிலெயே நின்று நிலைத்து தவம் செய்பவரே ஞானம் பெறுவர்.[/FONT]

    [FONT=&quot]புறத்திலே சற்குருவை பெற்று மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்று தவம் செய்து வருபவருக்கே, அகத்திலே, நம் தாயாரின் கருவிலே நாம் உருவாகும் போது முதன்முதலாக உருவான உறுப்பாகிய கண்ணிலே, மணியிலே அதன் உள் ஒளியே பின்னர் குருவாக அமையும்!
    [/FONT]
    [FONT=&quot]மெய்ப்பொருளை – கண்மணி ஒளியை குருவாக பெற்றாலே கடவுளை அடையலாம். உலகிலே ஒரு சற்குரு மூலம் மெய்ப்பொருள் சுட்டிக்காட்டப் பெற்றவனே தவம் செய்து தன் அகத்திலெ விளங்கும் கண்மணி ஒளியை குருவாக பெறுவான். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆன்மாவே குரு! மெய்குரு! சற்குரு பெற்றவனே மெய்குரு பெறுவான்!!

    அங்ஙனம் கருவிலெயே குருவாக விளங்கியது, நம்மை உடனிருந்து காப்பது கண்ணணே ஆகும்!

    கண்ணிலே இருக்கும் அவனே!

    அதாவது கண்மனி ஒளியே கண்ணன்!![/FONT]
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    [FONT=&quot]“நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்[/FONT]
    [FONT=&quot]நந்தி அருளாலே மூலனை நாடினோம் [/FONT][FONT=&quot]“ பாடல் – 68[/FONT]

    [FONT=&quot]நந்தி அருளாலே என்கிறாரே, சிவன் அருளால் என்று கூறவில்லையே ஏன்? சிவனை விட பெரியவரா நந்தி? இறைவனை கும்பிட வேண்டாமா? அவர் வாகனத்தை கும்பிட வேண்டுமா? குழம்பாதீர்கள்! திருமூலர் ஒரு ஞானி! [/FONT]

    [FONT=&quot]நந்தி என்றால் நம் தீ என்று பொருள்! நம் உடலில் உள்ள “தீ”. அதுதான் நம் உயிர் – பிராணன் – ஆன்மா என்பது. அதாவது மெய் பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்து நம் தீ நம் உடலினுள் உள்ள ஜோதியான நம் ஜீவனை பற்றி அதையே குருவாக பெற்றவர்கள் நந்தி அருள் பெற்ற நாதாக்கள் ஆவார்கள்![/FONT]

    [FONT=&quot]அங்ஙனம் பரம்பொருளே ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியாக வந்து மெய்ப்பொருள் உபதேசம் உணர்த்தியது சனகாதி முனிவர் நால்வர்க்கு! தவத்தால் தம் தீயை அறிந்தனர் உணர்ந்தனர் உய்வடைந்தனர் சனகாதி முனிவர்கள் நால்வருமே!

    தம் தீயை உணர்ந்த சனகாதிகள் நால்வரும், அகத்தியர், பதஞ்சலிமுனிவர்,வியாக்ரபாத முனிவர், திருமூலர் ஆகிய எண்வரும் நந்தியை உணர்ந்து அருள் பெற்று “நாதர்” ஆனார்கள்.

    நந்தி அருள் பெற்றவர்கள் “நாதர்கள்” என்று அழைக்கப்பெற்றனர்.[/FONT]

    [FONT=&quot]நந்தியை உணர்ந்து, நம் தீயை உணர்ந்து தீயாகவே நான் அதுவாகவே மாறிவிடுவதே மோட்சம்! முக்தி! ஞானம்! நந்தி அருள் பெற்று நந்தியாகிவிட்டனர்.

    திருமூலரும் நந்தி அருள்பெற்று நாதராகி அவர் உள் தீ வழிகாட்ட பரம்பொருளை, எல்லாவற்றிற்கும் மூலவஸ்துவை நாடினார். பெற்றார் அருள்! ஞானம்! [/FONT]

    [FONT=&quot]ஒவ்வொருவருக்கும் அவரவர் தீயே அவரவர் நந்தியே குருவாக அமையும் அகத்திலே!!

    நந்தி அருள் பெற்றவனே சிவன் அருள் பெற முடியும்
    .

    நந்தி வழிகாட்ட கைலாயத்துள் பிரவேசித்து சிவதரிசனம் பெறலாம்! சிவனருள் பெறலாம்![/FONT]

    [FONT=&quot]நந்தியாகிய ஆன்மாவை உணர்ந்தாலே அறிந்தாலே அடைந்தாலே சிவனாகிய பரமாத்மாவை நாம் அடையலாம்! வேறு வழியே கிடையாது.[/FONT]
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
    புந்தியின் உள்ளே புகப் பெய்து
    ” பாடல் – 73

    இதுவே நாம் தவம் செய்ய வேண்டிய வழியாகும்! திருமூலர் தன் தீயின் தன் ஆன்மாவின் இணையடி – இரண்டு திருவடியாகிய இரு கண்களை தலையில் கொண்டதால் அதன் வழியே, கண்மணி ஒளி வழியே உள்ளே புகுந்தார்.

    புந்தி” என்பது “புடைத்துக் கொண்டிருக்கிற கண்மணி”.

    நம் தலையின் உள் மத்தியில் இருக்கும் ஜீவ ஜோதியை காண தலையின் முன் உள்ள கண்மணி வழி உள் புக வேண்டும்.
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
    வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே
    ” பாடல் – 85


    வான்பற்றி நின்ற மறைப்பொருள்
    வான் – ஆகாயம். பரம்பொருளே ஜீவனாகி உடலினுள்ளே மறைந்து நன்று அருள்வதால் மறைபொருளாக விளங்குவதால், அந்த இறைவனைப் பற்றி கூறும் நூல் “மறை”, “வேதம்” என்று அழைக்கப்படுகிறது”.

    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் – “ஊன் என்றால் சதை. நம் உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஊன் சதை தனியாக இல்லை. எல்லா இடங்களிலும் எலும்பு, மஜ்ஜை, நரம்பு இணைந்தே உள்ளது!

    ஒரே ஒரு இடத்தில் மட்டும் தனியாக உள்ளது. அது தான் கண்மணி!!

    அதில் இரத்தம் இல்லை, நரம்பு இல்லை, எலும்பு இல்லை. நம் உடலோடு எந்த வித தொடர்பும் இல்லை.

    நம் கண்ணில் கருவிழியின் மத்தியில் பிராண நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு சதைக் கோளம்!

    கண்ணாடி போன்ற மெல்லிய ஜவ்வால் அடைக்கப்பட்ட ஊசிமுனை துவாரம் உடையது.

    பூமி எப்படி வானத்தில் அந்தரத்தில் உள்ளதோ அது போல் கண்மணி உள்ளது. பூமி சுழல அதனுள் மையத்தில் நெருப்பு உள்ளதோ அதுபோல கண்மணியும் அதன் மத்தியில் ஜோதியை கொண்டுள்ளது.

    நம் உடலில் இருந்தும் உடலை தொடாமல் இருக்கும் சதைக்கோளம், ஒரே உறுப்பு கண்மணியே!

    அதில் உணர்வோடு இருத்தல் வேண்டும். அதற்கே கண்மணி தீட்சை அவசியம்.
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே - நாம் அதை பற்ற பற்ற அது நம்மைப் பற்றிக் கொள்ளும். உணர்வு பெருக உடலின் ஊன் கண்மணி அதை பற்றி நிற்கும் ஜோதியை பற்ற பற்ற கண்மணி ஒளி ஊசிமுனை துவாரத்தின் உள் ஊடுருவி ஆத்ம ஜோதியை அடைந்து பிரகாசிக்கும்! இதுவே ஞானம் அடைய ஒரே வழி, பெற்று இன்புறுக என்கிறார் திருமூலர்.
     

Share This Page