ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா? ஆம் .. முடியும் " சிரமாறு உடையான் " 1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் - ஆறு முகம் படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் 5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும் ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்.. இதை சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர். Jayasala 42