{நன்றி: இந்த புதுகவிதையாளர்கட்கு.} துடிப்பு குழந்தையின் கையை நசுக்கியதால் கிரீச் ஒலியிட்டுக் கதறியது கதவு. :rant தி. பச்சமுத்து, கிருஷ்ணகிரி. +++ புனிதம் குழந்தைகள் தப்புத் தப்பாய் பாடினாலும் கெடுவதில்லை...! தேசியகீதத்தின் புனிதம். :cool2: -- கு. வைரச்சந்திரன், திருச்சி. ரசனை குழந்தையின் நடையை ரசிக்க முடியாமல் குமுறியது... நடைவண்டி! :idontgetit: -- கோவை. நா.கி. பிரசாத் +++ ஈஸ்வரா சாப்பிடாத குழந்தையை ‘சனியனே' என்று அம்மா திட்டியபோதும் குழந்தையுடனேயே இருந்தார் கடவுள். சனீஸ்வரனாக! :thumbsup -- ஆர்.பி. ஜெயச்சந்திரன்,பூனாம்பாளையம். +++ தவிப்பு பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச் சென்ற இடத்தில் இன்னமும் காயாமல் கிடக்கிறது குழந்தையின் கண்ணீர்த் துளி! :shock: -- தஞ்சை கமருதீன் கல்நீர் குழந்தையை விட அதிகமாய் அழுதது குழந்தை இடித்துக்கொண்ட கல்! --ப. கோபி, கிருஷ்ணகிரி. +++ ஊஞ்சல் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டேயிருந்தது குழந்தை காதில் இருந்த தொங்கட்டான்! -- ப. கோபி, கிருஷ்ணகிரி. +++ போட்டி குழந்தை வரைந்த வானத்தில் இடம் பிடிக்க முடியாமல் தவித்தன நிஜ நட்சத்திரங்கள்! :roll: -- சொக்கம்பட்டி, தேவதாசன். +++ விடுமுறை அரையாண்டு விடுமுறையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன பொம்மைகள்! -- பி. கோபி, கிருஷ்ணகிரி. ============================================= Reproduction by : "Renukamanian"
அழகான கவிதைகள்.. உண்மையான வரிகள் .. கவிதை எழுதியவர்க்கும், குங்கும இதழிற்கும், இங்கே பகிர்ந்தமைக்காக உங்களுக்கும் மனதார நன்றிகள் பல