1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Oru Kathasiriyarin Kathai

Discussion in 'Stories (Fiction)' started by Elvee, May 21, 2010.

  1. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Thank you everyone. ^_^ and latha, yes it is weekly story. My second kid is 5 months old. so ore stretch a ukanthu type panna mudiyala :( Hope you will still stay with the story.
     
  2. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    பகுதி - 3 - சுரேஷ் ​

    உள்ளே சென்ற மாமியும் அவளும் ஒரு நிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டனர். ‘மாமி, நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீங்க உக்காந்துகோங்க’ என்றாள்.
    ‘எங்க உக்கார. என் புடவ என்ன திட்டும், இதுல உக்காந்தா. நீ ஒட்டட அடிச்சு பெருக்கு, நான் இதெல்லாம் தொடச்சி வெக்கறேன். ’ மாமி ஐடியா தந்தாள்.

    ‘ஓகே மாமி. ஆனா முடியலேனா வெச்சுடுங்க, நான் பாத்துக்கறேன். இருங்க ஒரு டவல் கொண்டுவரேன். மூக்குல கட்டிக்கோங்க ’ என்றபடி படி ஏறினாள்.

    ‘சரிடீம்மா. நான், துடப்பமும் ஒட்டடகோலும் எடுத்து வெக்கறேன்’ என்றபடி மாமி தோட்டத்திற்கு சென்றாள்.

    விரைவில் இருவரும், தத்தம் வேலையை செய்ய ஆரம்பித்தனர். இருபது நிமிடங்களில் ஒட்டடை வேலையை முடித்தாள். மாமி டீவீ, பிரிட்ஜ் எல்லாவற்றையும் மும்முரமாகத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

    ‘மாமி ஹெல்ப் வேணுமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோங்க’ என்றபடி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டவுடன் போராடிக்கொண்டிருந்த மாமியிடம் போய் நின்றாள்.

    ‘ஆ, கை வலிக்குது. அவனயும் ஹெல்புக்கு கூப்டுக்கலாம் நெனச்சென். ஆனா இப்போ பக்கத்துல கூட போக முடியாது. அக்சுலா சொல்லப்போனா, நீ இங்க தங்கப் போறேனு சொன்னதும் அவன் மண்டைய ஆட்டிட்டு அவன் ரூமுகுள்ள போய் அடஞ்சுகுவானு தான் நெனச்சேன். இப்படி குதிப்பான்னு நெனச்சுக்கூட பாக்கல.’ என்று மாமி கூறிக்கொண்டே தன் வலது கையை பிடித்துவிட்டுக்கொண்டாள்.

    சிறிது மௌனத்திற்கு பிறகு, மாமி தொடர்ந்தாள். ‘அவன் காலேஜ் வரைக்கும் சோசல் டைப்பாதான் இருந்தான். அவனும் அவன் அம்மவும் தான். மைலாப்பூர்ல தான் இருந்தாங்க. அவன் சின்ன வயசுலுந்து அவன எனக்கு தெரியும்.
    அவன் அம்மா ரொம்ப ஒண்ணும் படிக்கல. ஒரு மெடிக்கல் ஷாப்ல தான் வேல. ரொம்ப வருஷம் அங்க இருந்தா. அப்பறம் லாப் அஸிஸ்டண்டுக்கு படிச்சு அந்த மெடிகல் ஷாப்க்கு சொந்தமான லாபுக்கு இன்சார்ஜ் ஆனா.
    ரொம்ப சின்ன வயசுலேயே அவன் அப்பா போயிட்டு. அம்மா தான் தனியா வளத்தா. அவங்களோட நெலமய சொல்லி வளத்ததால அவனும் அவள அநாவசிமா எதுக்கும் தொந்தரவு பண்ணதில்ல. காலைல பேப்பர் டெலிகதறல்வர் பண்ணி அவனும் அவனால முடிஞ்சத செஞ்சிட்டிருந்தான். அவங்க ரெண்டு பேரயும் ரிலாக்ஸுடா வெச்சிருத்தே அவனோட எழுத்துக்கள் தான்.
    முக்காவாசி நேரம் அவன் தனியா இருந்ததால, அவன் அம்மா “நீ எத பக்கும் போதும் அத பத்ன உன் மனசுல தோன்றத எழுதி வையு. நான் வீட்டுக்கு வந்ததும் படிக்கறேன். ஸ்கூல நடந்தது பிரண்டு கூட நடந்தது எதுனாலும் எழுது” னு சொல்லிருந்தா. அப்போ எழுத ஆரம்பிசவன் தான். எழுதி எழுதி அவன் கற்பன திறன் வளந்தது. கத கவதனு எழுத ஆரம்பிச்சான்.
    நைட் சாப்டும் போது அவன் எழுதினத ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. அவ இவனோட காலே செகண்டு இயர்ல போய் சேந்துட்டா. இவன்கிட கடசியா கேட்டுக்கிட்டது - காலேஜ எப்படியும் முடிச்சுடு, எழுதறத என்னிக்கும் நிறுத்தாத – இது ரெண்டும் தான்.
    லாப்ல இருந்ததால அவ நெலம அவளுக்கு முன்னமே தெரிஞ்சிருந்துது. ஒரு வருஷ வாடகய அட்வான்ஸா பே பண்ணிருந்தா. நம்பினா நம்பு, அவளோட கடசி காரியத்துக்காகர செலவு வர தனித்தனியா கவர் போட்டு வச்சிருந்தா. அத பாத்ததும் அவன் கதறின கதறல், எனக்கு இப்போ நெனச்சாலும் அழுக வருது.’ கண்ணை துடைத்துக்கொண்டாள் மாமி.
    மாமி தொடர்ந்தாள். ‘அவன் பிரண்டு கார்தி தான் கூட முழுக்க முழுக்க இருந்தான். காலேஜுல லிடேரச்சர் படிச்சுகிட்டு இருந்லும், மாக்ஸ் நல்லா போடுவான். டியுசன் எடுது தன் செலவ பாத்துகிட்டிருந்தான். அந்த பசங்க கிட்ட ரெணடு மாச டியுசன் பீஸ் அட்வான்ஸா வாங்கி, அவ காரியத்த முடிசான். அவ எடுத்து வெச்சிருந்த கவர் இன்னி வரைக்கும் அவன் கிட்ட இருக்குனு நெனக்கறேன்.’ மாமி முடிக்கும் போது இருவரும் கண்ணீரோடு இருந்தனர்.
    ‘இன்னி வரைக்கும் கார்தி தான் அவன் பிரண்டு. கார்திக்கு ஒரு வார பத்திரிகையோட எடிட்டர தெரிஞ்சிருந்தது. இவன இன்ரொடியுஸ் பண்ணினான். இவனோட ஒரு பக்க கதை, சிறுகதை அவங்க பப்ளிஷ் பண்ணாங்க. டியுசன், கதை, பேப்பர் டெலிவரி இதுல வந்த பணத்த வச்சு எப்படியோ காலேஜ் முடிச்சான். ஸ்காலர்ஷிபும் இருந்ததால சுலபமாச்சு. அவன் எழுத்துகளு பிரபலமாச்சு.
    காலேஜ் முடிச்சதும், ஒரு பப்ளிஷிங் கம்பெனி நாவல் எழுதி தர கேட்டுகிட்டாங்க. இவனும், சந்தோஷமா முடிச்சான். இவனோட இன்னோரு பிரண்டு தான் இவனுக்காக டைப் செஞ்சிட்ருந்தான், இவனுக்கு தெரியாததால. டெட்லைன்கு முன்னாடி நாள் அவனுக்கு போன் பண்ணி கேட்டா, அவன் என்னடான்னா, இன்னெரு பிரண்டு கூட படத்துக்கு போய்டானாம். என்னடா இப்படி பண்ணிடனு கேட்டா, “நான் உனக்கு ஹெல்பு தான் பண்ணறேன், நீ ஒண்ணும் எனக்கு சம்பளம் தரல”னு மூஞ்சுல அடிச்சுடானாம்.
    இவனும் கார்தியும் போய் அந்த பையன்கிட்டேந்து, அவன் டைப் பண்ணி முடிச்ச வரைக்கும் போய் வாங்கிட்டு வந்து மீதிய கார்தி நைட் புல்லா உக்காந்து முடிச்சு தந்தானாம். கொண்டு போய் சப்மிட் பண்ணுக்கப்பறம் தான் ரெண்டு பேரும் வாய தெறந்தாங்களாம்.
    இவன் கம்புயூட்டர் யூஸ் பண்ண பர்மிஷன் கேட்ருக்கான். ஆனா கார்தி, “நீனா கத்துகறத விட டைபிங் சென்டர்ல போய் கத்துகறது தான் நல்லது. தமிழ் டைபிங் அவ்வளோ இஸி இல்ல”னு அவன ஒரு இன்ஸ்டிடுட்ல சேத்தான். அங்க ஆறு மாசம் படிச்சான். இருந்த சேவிங்ச வெச்சு செகண்டு ஹாண்டு கம்பியுட்டர் வாங்கினான். அப்போலேந்து தான் இவன் இப்படி ஆனான். கிளாஸ், வீட்டுல டைபிங் பிராக்டிஸ் அப்பறம் கதை எழுதனும், எழுதினத டைப் செயணும், அவனே ப்ருப் ரீடிங்கும் பாக்க ஆரம்பிச்சான். இதெல்லாம் பண்ணிட்டு இருந்ததால வீட்டுலேயே கன்பைன் ஆகிட்டன். எல்லாரோடையும் கான்டாக்டு இல்லாம போச்சு. யாருமே வேண்டாம்னு ஆகிட்டான். இப்போ வெளில வர தெரியல.’ என்று மாமி முடிக்கும் போது சமையலறையும் குளித்திருந்தது.

    ‘அவனால உனக்கு ஒரு பிராப்ளமும் இருக்காது. இப்படி கத்தினாலும் நியூசன்ஸா இருக்க மாட்டான். அவன பத்தி அவ்வளோ தான்.’ என்றபடி பின் கழுத்தில் கையை வைத்து தலையை சுற்றிக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்தாள் மாமி.

    தோட்டத்தில் இருவரும் முகம், கை-கால் அலம்பிக்கொண்டார்கள். ‘பக்கத்துல காபிடே இருக்கு. வா போய் காபி போடி வாங்கி வரலாம்’ மாமி அழைத்தாள்.

    ‘இல்ல மாமி, தெரு மொனைல கடை பாத்தேன். பால் பாக்கெட், புரு, சக்கர வாங்கி வரேன்.’ கூறிக்கொண்டே மாடி ஏறினாள், பர்ஸ் எடுத்துவர. வாங்கி கொண்டு வந்தாள். இருவரும் காபி குடித்து முடித்தனர். மாமி மணி பார்த்தாள். நான்கை தொட்டுக்கொண்டிருந்தது சின்ன முள்.

    ‘சரி நான் கெளம்பறேன். நீயும் என் கூட வா, ஏதாவது வாங்க வேண்டியிருந்தா’ மாமி அழைத்தாள்.

    ‘வாங்க ஏதும் இல்ல. ஆனா லோகேஷன் பாத்து வச்சுகறேன் – பஸ் ஸ்டாண்டு, கடை எல்லாம். வாங்க போகலாம்’ என்றாள். இருவரும் கதவை சாத்திக்கௌண்டு கிளம்பினர்.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Elvee
    Mmmmmm paarunga na innoru tharam 1+2 part padichittu appuram than 3rd padichen.
    Katha kana joraa poguthu...
    Keep it up.
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi elvee....
    oh romba setai panrana unga 2nd son...ungalukku athukke time sariyaa irukkum....
    intha gap la kathai ezhuthureengala...great...
    intha kathaya epdi ezhuthuneenga nu oru kathai ezhuthunga...

    title...oru kathasiriyarin kathai - 2...:hide:
    just for fun pa....romba nalla irukku....intha part...keep posting...
     
  5. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Elvee Part 3 is Touching part . Nice
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hai elvee...
    story is going very good...:)
    avanoda kadantha kalatha pathi pramathama soliteenga...
    keep going...
     
    Last edited: Jun 6, 2010
  7. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Yashikushi, nalla irunthathu nu thirumba padichingala ille enna katha ne maranthu pochu nu thirumba padichingala? aana naan mudhalavathu nu nenachikiren :queen

    Priesh, Vaishnavie - nandrigal pala

    latha, aavan perula ennoda somberithanatha porvaya mudalam nu pathen athan:bonkini atleast varathuku twice post panna pakaren :p
     
  8. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    4. மாகி​

    மாமி அவளை தெருமுனையில் இருக்கும் மளிகை கடையில் அறிமுகப்படுத்தினாள். பின் இருவரும் வண்டியில் கிளம்பினர். ஐந்து நிமிடங்களில் கூட்ரோடை அடைந்தனர். அது ஒரு மினி தி.நகர் போல் இருந்தது. துணிகடை, பாத்திரக்கடை, ஸுப்பர்மார்கட், கோயில் என சகலமும் அங்கே இருந்தது. அனைத்து வங்கிகளின் எடிஎமும் இருந்தன. அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். மாமி அவளை வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறியபோது, தாமே நடந்து போய் கொள்வதாகக் கூறினாள். மாமி அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

    வழியில் அனைத்து கடைகளையும் பார்த்துக் கொண்டு நடக்கலானாள். காபி டே வந்தது. காபி பொடியின் மணம் அவளை கடைக்குள் இழுத்தது. காபி பொடி வாங்கிக் கொண்டு கிளம்பினாள். ஞாயிற்று கிழமை ஆனாலும் கூட்டத்திற்கு குறையில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்த போது மணி ஆறரை. கதவை வெறுமே சாத்திக் கொண்டு போனதால் சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். ரூமிற்கு போய் மெத்தையில் தொப்பென்று விழுந்தாள்.

    ‘ஆ... காலு வலிக்குது. மாமி கொண்டு விடறேன் சொன்னப்போ பேசாம, தாங்ஸ்னு ஏறிட்றிருக்கணும்.’ தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். சுத்தம் செய்தது, நடந்து வந்தது எல்லாம் அவளை சோர்வாக்கின. தன்னை அறியாமல் உறங்கிப்போனாள். எத்தனை நேரம் உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளது மொபைல் அலறியதில் திடுகிட்டு எழுந்தாள். தனது கைப்பையினுள் அதனை தேடி எடுத்தாள்.

    ‘ஹலோ’ கண்னை முடிக்கொண்டே பேசினாள்.

    ‘என்னடி பண்ற. அதுக்குள்ள துங்கிடியா’ எதிர்முனை அதட்டியது.

    நன்றாக கண்ணை விழித்துக் கொண்டு ‘அம்மா, தூங்கல மா. தூங்கி எழுந்துட்டேன். ஆறு மணிக்கே’ என்றாள்.

    ‘என்னடி சந்திய வேளைல. தனியா போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஆகிட்டியே ’ சத்தம் போட்டாள் அம்மா.

    ‘ஆரம்பிக்காதம்மா. டயர்டா இருந்தது. ஐஞ்சு நிமிஷம் படுத்துக்கலாம்னு நெனச்சேன். அப்படியே தூங்கிட்டேன். விடு பிளிஸ். தோ எழுந்துட்டேன்’ என்றபடி பெட்டை விட்டு எழுந்தாள்.

    ‘அப்பறம், போனதும் பெரிசா இடி விழுந்துதாமே. கேள்விப்பட்டேன்.’ கேட்டாள் அம்மா.

    ‘ஹா ஹா. ஆமாம்மா. நாங்க ரெண்டு பேருமே எதர்பாக்கல. ஆனா பிராப்ளம் ஏதும் வரும்னு தோணல.அப்பொ கதவ டமால்னது தான். இதுவர தறக்கல. அப்பாகிட்ட மட்டும் சொல்லாத’ என்றாள்.

    ‘நான் எங்க சொல்லறது. மாமி,நீங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்னது, கடைதெருக்கு போனு எல்லாம் சொன்னாங்க. அப்பா சரி பிராப்ளம் ஏதும் இல்லனு கொஞ்சம் கோவத்த கொறச்சிகிட்டாரு. அப்பறம் மாமியும் நானும் கிச்சன்ல பேசிகிட்டு இருந்தோம் உன்னோட என்றிய பத்தி. அப்பா அப்போ தண்ணி குடிக்க வந்திருக்காரு. எல்லாத்தையும் கேட்டுட்டாரு. அவ்வளோ தான். காலையோட இடி வெறும் பிஜிலி வெடி தான்கறா மாதிரி ஒரே சத்தம். அவன் யாரு என் பொண்ணுகிட்ட அப்படி பேசனு. அவர சமாளிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆச்சு.’ கூறினாள் அம்மா.

    ‘ஆமாம் அவரோட பொண்ண அவர் தான் திட்டணும்’ முணுமுணுதாள்.

    ‘உன்னையும் திட்டினாரு. அவனுக்கு இருக்கற அறிவு இவளுக்கு எங்க போச்சுனு, ஒரே சத்தம். எல்லா பேரன்ட்ஸும் இப்படி தான்டி. விட்டு பிடிக்கவும் மாட்டோம், விட்டு கொடுக்கவும் மாட்டோம். நீ நாளைக்கு வீட்டுக்கு வந்து ஆகணும்னு ஒரே குதி. வந்திடரையா? ’ அம்மா கேட்டாள்.

    ‘என்னமா சொல்லற.பர்ஸ்டு நாளே பாக் டு த பெவிலியனா? ’ சிணுங்கினாள்.

    ‘என்னடி பண்ண சொல்லற. எவன்கிட்டயோ திட்டு வாங்கவா நாங்க உன்ன பெத்தோம். கஷ்டமா இருக்குடி’ அம்மா வருத்தப்பட்டாள்.

    ‘நீ திட்டும் போது ஒரு தடவயாவது கஷ்டப்பட்டிருப்பியா? ’ சிரித்தாள்.

    ‘அது எங்க உரிமடீ. நீ நாளைக்கு வரியா இல்லயா, அத சொல்லு.’ அம்மா கண்டிப்பானாள்.

    ‘அம்மா ஒரு வாரம் டைம் கொடு. அதுக்குள்ள அவங்க சாரி கேக்கலைனா நான் வந்திடரேன். பிளீஸ் டைம் கொடுமா’ கெஞ்சினாள்.

    ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு பதில் வந்தது. ‘சரி அடுத்த சன்டே பாக்கலாம்’

    ‘முடிவே பண்ணிடியாமா’ சோர்வாக கேட்டாள்.

    அம்மா சிரித்தாள். ‘நீ அடுத்த சன்டே வரியோ இல்ல பிளான்படி ரெண்டு மாசத்துல வரியோ, உன் இஷ்டம் ஆனா நெக்ஸ்ட் டைம் திட்டு வாங்கிட்டு நிக்காத’

    அம்மா முடிப்பதற்குள் கேட்டாள். ‘பளார்னு ஒண்ணு கொடுத்துட்ட்டுமா?’ சிரித்தபடி கேட்டாள்

    ‘அது உன் சாமர்தியம். பிராப்ளமே இல்லாம இருந்துப்பியோ, இல்ல அடிசிப்பிங்களோ. ஆனா ஒரு சின்ன பிராப்ளம்னாலும் அடுத்த நிமிஷம் நீ வீடுல இருக்கணும். புரியுதா. சரி, அதவிடு, சாப்டியா? ’ அம்மா கேட்டாள்.

    ‘இல்லமா இனிமேதான். தூங்கிடேன்ல. அம்மா, நம்ப மாட்ட இங்க பிரிட்ஜ் புல்லா வெரைடி வெரைடியா மாகி தான்மா’ பதிலளித்தாள்.

    ‘போச்சுடா. இதுதான் சாக்குனு 24மணி நேரமும் மாகில முழுகிடாத, கேட்டியா. சரி சாப்ட்டு தூங்கு. நாளைக்கு ஆபிஸ் போகணும்ல’ அம்மா அக்கறையானாள்.

    ‘சரிம்மா. நீ கவலபடாத. உனக்கே தெரியும்ல கொஞ்சம் பிராப்ளம்னாலும் நான் சொல்லவேண்டியத சொல்லிட்டு வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் பாத்துகோங்க. நாளைக்கு கால் பண்ணறேன். பை மா. ’ அம்மாவிடம் விடைபெற்றாள்.

    மொபைலை அணைத்துவிட்டு முகம் கை-கால் அலம்பிக் கொண்டு கிழே இறங்கி பிள்ளையாரை கும்பிட்டாள். சமையலறைக்குள் நுழைந்து, பிரிட்ஜிலிருந்து மாகி டபுள் பாக்கெட்டை பிரித்து அடுப்பில் போட்டாள். வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள். சுரேஷ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

    ‘வெளில போனதே தெரியலையே. நல்லா தூங்கிருக்கேன்.’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு நின்றான்.

    அவன் ஆரம்பித்தான். ‘நீங்க இருக்கறது ஞாபகம் இல்லாம பூட்டிட்டு போயிடேன்.’ முடித்தான்.

    ‘ஓ’ என்றாள். அதற்குள் மாகி வாசனை வெளியே வரவே, சமையலறையை திரும்பி பார்த்து, ‘மாகி பண்ணிட்டு இருக்கேன், சாப்படறீங்களா’ என்று கேட்டாள்.

    ‘ஒரு நிமிஷம். பூட்டிடேன்கறதுனால கில்டியா பீல் பண்ணி பேசினேன். அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்லறேன். டோன்ட் டிஸ்டர்பு மீ. நான் உங்கள சமைக்க சொல்லலியே’ கோவமாக கேட்டான்.

    ‘நீங்க சொல்லல. ஆனா பிரிட்ஜிலேந்து தான் மாகி எடுத்திட்டேன். கடைக்கு போனப்போ மறந்துட்டேன். அதான் சேத்து செஞ்சேன்.’ தயங்கியபடி கூறினாள்.

    ‘அடுத்தவங்களது எடுக்கும் போது கேக்கணும்னு கூடவா தெரியாது.’ எகிறினான்.

    ‘கடைக்கு இப்ப போக ரொம்ப டயர்டா இருந்தது. இங்க ஸ்டாக் நெறய இருக்கேனு எடுத்தேன், உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு. ’

    ‘உங்க இஷ்டத்துக்கு ஏதும் நெனக்காதீங்க. இதுக்கு தான் யாரும் வேண்டாம்னு இருந்தேன், மாமி சதி செஞ்சுடாங்க. ’ குரலை உயர்தினான்.

    ‘உங்க பர்மிஷன் இல்லாம எடுத்தது தப்பு தான். சாரி, இப்பவே கடைக்கு போய் உங்க மாகிய ரீபிளேஸ் பண்ணிடறேன். ஆனா கத்தறதுனால ஒண்ணும் சாதிக்க முடியாது’ என்று அமைதியாக கூறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு மாடி ஏறினாள்.

    ‘நான் ரீபிளேஸ்மெண்ட் கேக்கல. ஆனா என் சம்மந்தபட்ட எந்த எல்லைகுள்ளும் யாரும் வரத நான் அனுமதிக்க மாட்டேன்.’ கூறிவிட்டு தன் கூட்டிற்குள் அடைந்து கொண்டான்

    அவள் கீழிறங்கி வந்தாள். சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு கண் மூடினாள். ‘எனக்கு தேவயில்லாத வேல. நல்லா வேணும் எனக்கு’ தன்னை நொந்தபடி மாகியை ஒரு தட்டில் கவிழ்த்க் கொண்டு ஸ்பூணுடன் டீவீ முன் சென்று அமர்ந்து அதனை ஆன் செய்தாள். டீவீ பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

    ‘இத்தன நாள்ல, இப்படி டேஸ்டே இல்லாம, மாகி இருந்ததே இல்ல’ என்றெண்ணியடி மாகியை முழுங்க ஆரம்பித்தாள்.



    தொடரும்....
     
    Last edited: Jun 9, 2010
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba nalla poguthu kathai.......

    quick a heroine ethukku vanthurukka nu sonna nalla irukkum...:)

    suspence thaangala....:spin
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ada kadavule oru maggika sandai...:bonk
    per eh solala latha ka... athukulla matter enanu kekureenga...

    going good elvee...
     

Share This Page