ஒரே அறையில் ஒரு வைணவரும் சைவரும் தங்க நேர்ந்தது.மொட்டைத் தலையும் ருத்திராக்ஷமுமாக சைவரும்,பெரிய நாமமும் முன் குடுமியுமாக வைணவரும் காட்சி அளித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர். சைவர் ஒரு மூலையில் அமர்ந்து திருநீறு பூசத் தொடங்கினார்.அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது, "யோவ் வைணவரே,நம்மைப் படைத்தது உங்க திருமால் இல்லை. எங்கள் சிவ பெருமான் தான் " என்றார் தீர்மானமாக. ஏனென்றால் திருமால் நம்மைப் படைத்திருந்தால் நாமம் போட வாகாக , நெற்றியை நீள வாட்டத்தில் படைத்து இருப்பார்.நம் நெற்றி திரு நீறு பூசும்படி குறுக்குவாட்டத்தில் தான் உள்ளது " என்றார். வைணவருக்கு இதற்கு எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை.ஒரு மூலையில் அமர்ந்து நாமக் கட்டியைக் குழைத்து நாமம் போட ஆரம்பித்தவுடன் அவருக்கு விடை கிடைத்து விட்டது. " யோவ் சைவரே, உண்மையான கடவுள் சிவன் என்றா சொன்னீர்? திரு நீறு பூசும்போது தலையைநன்றாக கவனியும்.அது வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பிப் 'பூசாதே,வேண்டாம், வேண்டாம் 'என்று சொல்வது போல் இல்லையா?" " நாமம் போடும் போது தலையைப் பாரும்.மேலும் கீழும் தலை அசைந்து 'நாமம் போடு. நாமம் போடு'என்று ஆமோதிக்கும் .இப்போதாவது புரிகிறதா,யார் பெரியவர் என்று ?"என்றார் வைணவர் உறுதியாக. இது வரை நான் கேள்விப் படாத argument.
இதமான பட்டி மன்ற வாதம். பாரதி சகோதரியும் அன்பு ராசாவும் மனக்கண்ணில் வருகின்றனர். நன்றி பகிர்ந்தமைக்கு.