Dear Chithra Maami, Namaskaram. Thank you for posting. I would like to know if I can an audio cd / download these songs so that i can learn the raaga that these songs are sung. i am very much interested in learning this Aaru vaara Padalkal posted by you. Thanks, Priya
Dear Sindhu, Goddess Mangadu Kamakshi, sent you a garland at the right time, giving an indication ! We must always remember Deivam manushya roopaeNa ! Thanks for sharing the incident. Love, Chith.
Dear Deepa, It is as much pleasure for me to post this, as it is for you to read it & use it ! Thanks. Love, Chithra.
Dear Pras, I am not sure if it is downloadable from the net. Bombay Sisters had given an audio casette, many years back. You can find out if it is still available. You can find out from the downloading kiosk at Giri's.They will be able to help you. Love, Chithra.
Would really appreciate if someone could translate the padal into its English meaning and english version of the tamil pronounciation. Thank you for all your advice.
மூன்றாம் வாரப்பாடல்: காமாட்சி தேவியே கனிவாய் மொழியாளளே கடைக்கண் பாரம்மா! பாமாலை கொண்டு பாதமலர்களை வணங்கினேனம்மா! ஆதாரமான்றில்லேன் பேதையேன் உடைய வேதனை தீரம்மா வேதம் நான்கிலும் உறைபவளே பேதம் தீர்க்கும் குணநிதியே (காமாட்சி தேவியே...) எங்கும் பொதிந்த விந்துநாதமே சூதுஏதும் அணுகாமல் காத்திடுவாய் பாங்காக அருள்செய்யும் பார்வதியே பக்தன் மனக்குறை தீரம்மா சங்கு சக்கரத்தான் சோதரியே உன் சோதனையைத் தாங்கும் திறமில்லை பங்கமில்லா அறிவோடு பாதம் தொழவும் கருணை விழியால் பாரம்மா (காமாட்சி தேவியே...) மூன்றாம் வாரம்வரச் செய்தாய்யாவுன்உன் செய்கை என்றுணர்ந்தேன் நான்றவாயை உடைய பிள்ளைகணபதியும் முன் நிற்கக் கண்டேன் தேன்மொழியான் வள்ளி தேவேந்திரன் மகன் குஞ்சரி மணாளனும் மகிழக் கண்டேன் கானகத்திலுற தெய்வங்கள் தலைவன் மாலரன் சேயும் அருளக் கண்டேன் (காமாட்சி தேவியே...) அன்புடன் சித்ரா.
நான்காம் வாரப் பாடல்: முப்பத்திரண்டு அறங்கள் வளர்க்கும் காமாட்சியே சரணம் மூவர்க்கும் யாவர்க்கும் முதலாய்நின்ற மூல மனோன்மணி சரணம் உன்கோவில்நாடி ஓடிவரும் அன்பர் ஆயிரம் ஆயிரம் அம்மா உன்னஒயே சரணம் என்பவர் வினைதான் பொடிபொடியாய் விடும் அம்மா (முப்பத்திரண்டு..) கிளியைக் கரத்தில் கொண்ட தாயே என்கிலியை நீக்கியருள்வாய் கடைவிழியால் என்னைப் பார்த்தால் போதும் கடையேன் உய்ந்துவிடுவேன் அக்கினியிலே தவமிருக்கும் தேவி அடியேன் படுந்துயர் களைவாய் இக்கணம் வந்து பிள்ளையை அணைத்து ஆறுதல் மொழி சொல்வாய் (முப்பத்திரண்டு..) காஞ்சி செல்லுமுன் மாங்காடு வந்து கடுந்தவம் செய்ததேவி பின் ஆகம விதிப்படி பூஜைகள்செய்து ஈசன் அருள் பெற்ற தாயே நான்காம் வாரம் பாங்காக வந்து இசையுடன் பாடச் செய்தாய் தீங்கேதும் வராமல் காத்திட வேண்டும்தீனதயாபரி (முப்பத்திரண்டு..) அன்புடன் சித்ரா.
ஐந்தாம் வாரப் பாடல்: ஒருகையில் கிளியுடன் நின்றாளம்மா அவள் குருவென எனக்கருள் செய்தாளம்மா பெருமைகள் யாவும் தந்தாளம்மா என் தருக்கிளை அழித்து ஆண்டுகொண்டாளம்மா (ஒரு கையில்) மறுகையில் கரும்புடன் சிரித்தாளம்மா என் சிறுமைகள் அனைத்தும் விலகிற்றம்மா சீறும்பாம்பை அணிந்தாளம்மா அவள் வீறுகொண்டு கொடியரை அழித்தாளம்மா (ஒரு கையில்) அஞ்சாம்வாரம் வந்து அரற்றுகின்றேன் கடல் நஞ்சுண்ட கண்டன் நாயகியே தஞ்சமென உன்பாதம் பணிந்தேனம்மா இனி கெஞ்சும்நிலை பிறரிடம் இல்லையம்மா (ஒரு கையில்) பயமினி உனக்கேன் என்றாளம்மா இனி சயசயம் என்றே உரைத்தாளம்மா உயிர்கள் யாவும் ஈன்றௌன்னருளால் எமன் கயிறு என்னைப் பிணைக்காதம்மா (ஒரு கையில்) அன்புடன் சித்ரா.