Lines i pasted in the wall: Things to do today 1. Get up from Bed 2. Survive 3. Go back to Bed. These lines i found in a web... C'ms to be nice...
குருவே! நானும் அந்தப் பெண்மணியைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலாயிருக்கிறேன்..." "அப்படியானால், வா! அந்தப்புரத்துக்குப் போகலாம். உன்னை ஏற்கனவே அவளுக்குத் தெரியும் அல்லவா? நீ சின்ன இளவரசருக்கு வேண்டியவன் என்பதும் தெரியும். ஆகையால் உன்னிடமும் சிறிது சுகமாக இருக்கக்கூடும்." குருவும், சீடனும் மாளிகையின் பின் கட்டுக்குச் சென்றார்கள். தாதிமார்களிடம் நேற்றிரவு வந்த பெண்மணியை அழைத்து வரும்படி அநிருத்தப்பிரம்மராயர் கட்டளை இட்டார். தாதிமார்கள் அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அநிருத்தர் அவளைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றார். ஆழ்வார்க்கடியானின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. <!-- NewPP limit reportPreprocessor node count: 77/1000000Post-expand include size: 3619/2048000 bytesTemplate argument size: 2958/2048000 bytesExpensive parser function count: 0/500--><!-- Saved in parser cache with key tawikisourcecache:idhash:471-0!1!0!!ta!2 and timestamp 20100307084159 -->---------------- --------------- -------------- "குருதேவரே! இந்தப் பெண்ணையே கேட்டு விடலாமே?" "அப்பனே! உன் முகத்தில் தவழும் புன்னகையைப் பார்த்தால், உனக்கு ஒருவேளை தெரிந்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. சரி! இவளையே கேட்டு விடுகிறேன்; பெண்ணே! நீ செவிடு இல்லையா? நான் பேசுவது உனக்குக் காது கேட்கிறதா...?" "ஐயா! நான் செவிடாயிருக்கக் கூடாதா என்று சில சமயம் விரும்பியதுண்டு. ஆனால் எனக்குக் காது கேட்பது பற்றி இப்போது சந்தோஷப்படுகிறேன். அந்தச் சண்டாளன் வைத்தியர் மகன் தலையில் மரம் ஒடிந்து விழுந்த செய்தியைக் கேட்டேன் அல்லவா? சுவாமி! அவன் செத்து ஒழிந்தானா?" என்றாள் பூங்குழலி. "ஆகா! உனக்குக் காது கேட்கிறது; பேசவும் பேசுகிறாய்; நீ ஊமை அல்ல!" என்றார் அநிருத்தர். "நிச்சயமாய் இந்தப் பெண் ஊமை இல்லை!" என்றான் சீடன். "ஆகா! நான் ஊமையில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களே! சோழ சாம்ராஜ்யத்திலேயே மிக்க அறிவாளி முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் என்று நான் கேள்விப்பட்டது சரிதான்!" என்றாள் பூங்குழலி. "பெண்ணே! என்னைப் பரிகாசமா செய்கிறாய்! ஜாக்கிரதை! நீ ஊமையில்லாவிட்டால் நேற்று இரவு இங்கு வந்ததிலிருந்து பேசாமலிருந்தது ஏன்? ஊமைபோல் நடித்தது ஏன்? உண்மையைச் சொல்லு!" என்று கேட்டார் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மாதிராயர்.
Continuing your thread kuccoo, here are the words which are unforgettable for me: THE MAN WHO OFFERS AN INSULT WRITES IT IN SAND, BUT FOR THE MAN WHO RECEIVES IT, IT IS CHISELLED IN BRONZE. LOVE SEEMS THE SWIFTEST BUT IT IS THE SLOWEST OF ALL GROWTHS. NO MAN OR WOMAN KNOWS WHAT PERFECT LOVE IS UNTIL THEY HAVE BEEN MARRIED A QUARTER OF A CENTURY.