சினிமாவில் பல ஆண்டு காலம் போராடி தற்போது தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் சுமார் மூஞ்சி குமார். இவர் நடிக்கும் படம் என்றாலே அது நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஏற்பட்டு பெரிய இடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் படப்பிடிப்புகளில் எப்போதும் குடி போதையில் இருப்பதாக செய்திகள் பரவுகின்றன. இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். குடியால் அழிந்துபோன பல நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர் வரக்கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
கடந்த பல வாரங்களாக ரசிகர்களை ஜில்லாக்கியதுடன், கோடம்பாக்கத்தையும் சூடாக்கிய மேஜிக் பெண் சுசித்ராகார்த்திக், தற்போது ‘நாட் ரீச்சபுள் அட் த மூவ்மென்ட்’! சுசி லீக்ஸ் ட்விட்டர் அக்கவுன்ட்டில், சுண்டல் செய்வது எப்படி? சுரைக்காய் அரிவது எப்படி? போன்ற அரைவேக்காட்டு துணுக்குகளே தொடர்வதால், புல் வேக்காட்டில் இருக்கிறார்கள் சுசிலீக்ஸ்சின் நாடு தழுவிய பக்தர்கள். கொஞ்சம் சீரியஸ் ஆக இந்த விஷயத்தை அணுகினால், சுசித்ராவுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. தற்போது சுசித்ரா எங்கேயிருக்கிறார் என்கிற தகவல், அவரது கணவர் கார்த்திக்குக்கே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம். அவரது வழக்கறிஞரை தொடர்பு கொண்ட மீடியாவிடம், “எனக்கும் தெரியல சார்” என்பதே பதிலாக இருக்கிறது. அவர் பரபரப்பான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த போது கூட, தமிழில் ஒன்றிரண்டு நிருபர்களிடம் தகவல் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் இப்போது யார் முயற்சி செய்தாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சுசித்ரா எங்கு போனார்? யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? சுய நினைவுடன் இருக்கிறாரா? அல்லது… வேறு ஏதாவது ஆபத்து சூழ்ந்திருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கடைசியாக கூறும்போது ஒரு புகழ்பெற்ற நடிகரின் பெயரை குறிப்பிட்டு, “அவரது வீடியோதான் அடுத்ததாக வரப்போகிறது” என்று எச்சரித்திருந்தார். சுசித்ரா காணாமல் போனதற்கும் அந்த புகழ்பெற்ற நடிகருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்வதற்கு முன், அவரை காப்பாற்ற வேண்டிய கடமை போலீசுக்கு இருக்கிறது.
நமது தொழில் வட்டத்திலிருப்பவர் எளியவராக இருந்தாலும், அவரையும் நேசி! முழுதாக அன்பு கொள்! இதுதான் அஜீத்தின் பலவருஷ பாலிஸி. ஊர் என்ன சொன்னாலும், ‘என் வழி தனி வழி’ என்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதை வலியுறுத்துவது போல நடந்த அந்த சம்பவத்தை தற்போது கேட்க நேர்ந்தது. அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி சென்னையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அஜீத்தின் உறவினர்களும், நெருங்கிய நட்பு வட்டாரமும் அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அங்கு வந்திருந்தார்கள். முன்னதாக மனைவி ஷாலினிக்கு மேக்கப் அலங்காரம் செய்வதற்கு ஒரு மேக்கப் மேனை அஜீத்தே ஸ்பெஷலாக போன் செய்து அழைத்திருந்தார். குறித்த நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்ற மேக்கப் மேன் ஷாலினிக்கும் ஷாம்லிக்கும் சேர்த்தே மேக்கப் செய்திருக்கிறார். விருந்தினர்கள் வந்தபின் அவர்களோடு பேசுவது, போட்டோ எடுத்துக் கொள்வது என்று செம பிசியாகிவிட்ட அஜீத், எல்லாரும் கலைந்து போன பின்தான் இவரை தேடியிருக்கிறார். “நான் வரச்சொன்ன மேக்கப் மேன் போயிட்டாரா?” என்றாராம் ஷாலினியிடம். “அப்பவே போயிட்டாரே…” என்று கூறியிருக்கிறார் அவர். ஐயோ சம்பளத்தையும் வாங்கல. சாப்பிடவும் இல்ல போலிருக்கே?” என்றவர், நள்ளிரவு 12 மணியை தாண்டிய அந்த நேரத்திலும் போன் அடித்துவிட்டார் மேக்கப் மேனுக்கு. “தம்பி… நீங்க சாப்பிடாம போயிட்டீங்க போலிருக்கு. சம்பளமும் வாங்காம போயிட்டீங்க. கெஸ்ட் நிறைய பேர் வந்ததால் உங்களை கவனிக்க முடியல. ஸாரி…” என்று கூற, எதிர்முனை கரகரவென அழ ஆரம்பித்துவிட்டது. “ஐயோ சார்… நான் ஒரு பெரிய ஆள்னு எங்கிட்ட போய் சாரியெல்லாம் கேட்கிறீங்க. நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்று ஒரு பொய்யை சொல்லி சமாளித்திருக்கிறார். மறுநாள் வெளியூர் செல்லவேண்டி இருப்பதை அவரிடம் சொன்ன அஜீத், “உங்களை நான்தான் போன் பண்ணி வரச்சொன்னேன். என் கையால உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இல்லேன்னா வீட்ல வந்து வாங்கிக்க சொல்லிடுவேன். என்ன பண்றது?” என்று கவலைப்பட… “இல்ல சார். அது ஒரு விஷயமே இல்ல. நீங்க இருக்கும்போதே நான் வர்றேன் ” என்று கூறினாராம் அந்த மேக்கப் மேன்!
தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலே TRP-யை மையப்படுத்தி தான் நடந்து வருகின்றது. அப்படித்தான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கோபிநாத் ஒரு டாக் ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு இளம்பெண்ணின் படிப்பு செல்வை நான் ஏற்கிறேன் என்று பொது மேடையில் கூறினார். ஆனால், இன்று வரை அந்த பெண்ணிற்கு பணம் வந்து சேரவில்லையாம், சமீபத்தில் ஒரு பிரபல யு-டியூப் சேனலில் அந்த பெண் இதை கூறியுள்ளார். மேலும் அந்த பெண் ‘நீங்கள் உதவி செய்கிறேன் என்று சொன்னதே போதும், அதற்கே பெரிய மனம் வேண்டும், ஆனால், அப்படி சொல்லிவிட்டு, இப்படி ஏமாற்றும் விதமான இனி நடந்து கொள்ளாதீர்கள்’ என கூறியுள்ளார். தங்கள் தொலைக்காட்சி TRP-க்காக எதையாவது சொல்லிக்கொண்டு பின் இப்படி மாட்டிக்கொள்வது தொலைக்காட்சிகளுக்கு புதிதல்ல…
ஹன்சிகாவின் நிலைமை இப்படியாகும் என்று அந்த மேக்கப் பாக்சே கூட நினைத்திருக்காது. ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஹன்சிகாவின் இப்போதைய சந்தை மதிப்பு வெறும் ஐம்பது லட்சம்! அதுவும் ஜி.வி.பிரகாஷுக்கு அவரே போன் அடித்து, “என்னை ஜோடியா சேர்துக்கங்க” என்று பல வாரங்களாக கெஞ்சி வந்ததன் விளைவு… ஹன்சிகாவுக்கு யெஸ் சொல்லிவிட்டார் ஜி.வி. இதையடுத்து நடந்ததுதான் பெரும் மன உளைச்சல். இந்தப்படத்தை எழில் இயக்கவிருப்பதாகவும் ஜி.வி.க்கு ஜோடியாக சமந்தாவும் ஹன்சிகாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதே காலக் கொடுமை. இதில் ஐம்பது லட்சம்தான் முடியும் என்று சொன்ன எழிலிடம், அதுவும் ஓ.கே என்று தரை மட்டத்திற்கு இறங்கி வந்த ஹன்சிகாவின் செயல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் ஹன்சிகா? சும்மாதானே கிடக்குது? எடுத்துட்டு போய் குளக்கரையில போட்டால் நாலு பேர் துணி துவைக்க உதவுமே என்று ரிட்டையர் ஆன அம்மிக்கல்லை கேட்பார்கள் இல்லையா? அப்படி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம் அவரை. சூரி, வடிவேலுகெல்லாம் ஜோடியாக நடிக்க அழைப்பதற்குள் ஓரளவுக்கு சுமாரான ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்துவிட்டால், உள்ளதை தக்க வைத்துக் கொள்ளலாமே? அதற்காகதான் இப்படியொரு முடிவை எடுத்தாராம் அவர். கமிஷன் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று மனசை கல்லாக்கி கொண்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்த அவரது மேனேஜருக்கு நடு வீட்ல வச்சு மாவிளக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் ஹன்சிகாவின் மம்மி! அதுதான் பலத்த சோகம்!
கீர்த்தி சுரேசை ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, வேற இளம் ஹீரோயின்கள் இல்லாததினால், வேற வழியே இல்லாமல் கீர்த்தியை புக் பண்ணிய ஹீரோக்கள் லிஸ்ட் அதிகம். எப்போ தொடரி படத்தில் நம்ம தனுஷ் கூட நடிச்சாரோ, அப்ப நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்த ஆரம்பிச்சது, பைரவா வரை நீண்டுகொண்டு வருது. பைரவாவில் தன் பெர்பார்மன்ஸை பார்த்து மக்கள் கொடுத்த கமெண்ட் எல்லாம் கீர்த்தியை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளது. கையில் சூர்யாவுடன் உள்ள தானா சேர்ந்த கூட்டம் தவிர வேறு தமிழ்ப்படம் இல்லை. அதனால் சூப்பரா பெர்பாமென்ஸ் கொடுக்க, கேரவனுக்குள்ளேயே தன் அம்மா முன்னாள் ஹீரோயின் மேனகா முன் ரிகர்சல் பார்க்கிறாராம். அதனால் தான் லேட்டாம்.
போலீசாக நடிக்கிற அநேக ஹீரோக்கள் பின் மண்டையில் கொத்தாக முடி வைத்துக் கொண்டு திரிவதெல்லாம் நடிப்புக்கே செய்கிற துரோகம்! இன்னும் சிலர், ‘இதுபோதும் நீங்க கொடுக்கிற சம்பளத்துக்கு’ என்பது போலவே இருப்பார்கள்… நடிப்பார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் சுட்ட சங்கை எடுத்து கெட்ட நேரத்தில் ஊதி காதையே செவிடாக்கிவிடும். ஆனால் சின்னதும் பெரிசுமாக சுமார் நானூறு படங்களை தாண்டிவிட்ட ராதிகாவுக்கு இத்தனை அனுபவத்திற்கு பிறகும், தொழிலில் வைத்திருக்கிற அக்கறை இருக்கிறதே… அதற்கு தனியாக ஒரு கேசட் போட்டு ஊர் முழுக்க பாட விடலாம். வேறொன்றுமில்லை… உதயநிதி நடிக்கும் புதிய படம் ஒன்றை கவுரவ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடிப்பவர் நம்ம ராதிகாதான். கதைப்படி அவர் அரசு பஸ் டிரைவராம். பஸ் ஓட்டுவது போல சில ஷாட்கள் எடுக்க வேண்டியிருந்ததாம். கார் ஓட்ட தெரிந்த ராதிகா சும்மா உட்கார்ந்து ஸ்டியரிங்கை திருப்பி பம்மாத்து காட்டினாலே, போதும் மேடம். பிரமாதம் என்று கூறிவிடுவார் டைரக்டர். ஆனால், ஒரு வாரம் பஸ் ஓட்டுவதற்காக முறைப்படி ட்ரெய்னிங் எடுத்தாராம் ராதிகா. ஒரு ஷாட்டா இருந்தாலும், அதில் ஒப்பேத்தல் இருக்கக் கூடாதுங்க. அதையும் முறைப்படி செய்யணும் என்று கூறிவிட்டாராம் ராதிகா. அப்புறமென்ன? ராதிகா பஸ் ஓட்டுவதை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தள்ளிவிட்டார் கவுரவ்! சும்மாவா… கிழக்கே போகும் ரயில்ல வந்த பொண்ணாச்சே? பஸ்செல்லாம் ஒரு கஷ்டமா?