Tamil poets are very good in composing poems with 2 or 3 meanings. கஞ்சி குடியாளே கம்பஞ்சோறுஉண்ணாளே வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே-நெஞ்சுதனில் அஞ்சுதலையரவாருக்கு ஆறுதலை யாவாளே கஞ்சமுகக் காமாட்சியே! (காமாட்சி அம்மன் கஞ்சி குடிக்கமாட்டாள். கம்பஞ்சோறு சாப்பிடமாட்டாள். காய் கறி உண்ணமாட்டாள். ஐந்து தலைப் பாம்புக்கு ஆறாவது தலையாக மாறி வற்றிய முகத்துடன் காணப்படுகிறாள்) உட்பொருள் ------------ கஞ்சி குடியாள்=காஞ்சியில் குடியிருப்பவள் கம்பஞ்சோறுஉண்ணாள்= ஏகாம்பரநாதன் எனும் கம்பனின் நிவேதனத்தை உண்ணாமல் ,தனிக் கோவில் கொண்டு தனக்கென்று வரும் நிவேதனத்தை மட்டும் உண்பவள் வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாள்=சினத்தை விரும்பாதவள் ,மன்னிக்கும் குணம் கொண்டவள். அஞ்சுதலைஅரவாருக்கு=ஐந்து முகம் கொண்ட சிவனை ஆராதிப்பவர்களுக்கு ஆறுதலை ஆவாள் =அமைதி தருபவள். அஞ்சுதலைஅறிவார்க்கு என்று வைத்துக் கொண்டால் 'பயத்தை உடையவர்க்கு அச்சம் நீக்குபவள்' என்று பொருள் படும். தமிழில் இது மாதிரி சிலேடைக் கவிதைகள் ஏராளம் . jayasala42