என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..." "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!" "என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..." "நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!" நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..." "அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க.. படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான். ஏன் என்னாச்சு..? அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான். "என்னது உங்க பேர் "நல்ல காலமா?" "ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!" மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...? ஆபீஸ்லியா வீட்டிலியா...? ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்? ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம். தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...? ஏன்? டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான். தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...! இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...! [FONT=trebuchet ms,sans-serif]Tamil Joke[/FONT] ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் ! அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் ! [FONT=trebuchet ms,sans-serif]Tamil Jokes[/FONT] இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா? ஏனாம்? தீப கர்ப்பமா இருக்கிறதுனால. [FONT=trebuchet ms,sans-serif]Tamil Jokes[/FONT] உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்? அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான். [FONT=trebuchet ms,sans-serif]Tamil Jokes[/FONT] தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க. [FONT=trebuchet ms,sans-serif]Tamil J[/FONT] எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க? என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார். இந்நேரம் விழுந்திருக்குமே சார்? இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ! [FONT=trebuchet ms,sans-serif]Tamil Jo[/FONT] மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்? டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே? டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்! [FONT=trebuchet ms,sans-serif]Tam[/FONT] "ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?" "இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!" நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை. டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார். முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! பின்னவர் : எப்படி? முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...! ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...? நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..." "போகும் போது டாக்டர் ...?" "வெறும் பாக்கெட்டோட போகலாம்!" [FONT=trebuchet ms,sans-serif]T[/FONT] "என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..." "அவ்வளவு அழகா?." "இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க." Jayasala42