Vinayagar agaval Hi, Can somebody post Vinayagar agaval? It goes like this... Seethak kalaba senthamarai poompaadha... I know it is quite big. So it will be good if someone can point to a link from where it can be downloaded as an audio file (or) a site in which it can be played? Also, a link from which the text of vinayagar agaval can be downloaded or viewed or printed, is also find. Thanks in advance! Malar
Vinayagar Agaval by Avvai Malar, I have attached Vinayagar Agaval. It is in pdf, Tamil. Good luck reading it. I am also reading Vinayaga Agaval inspired by Kanch Periyavaal's words that this is a slokam containing mantra roopamaana palam. Link to Vinayagar Agaval sung by Bombay Sisters http://www.coolgoose.com/music/song.php?id=203506 Good luck Vidya PS: In addition to Vinayagar Agaval, thereare more Vinayagar slokas in the attached pdf (you need adobe acrobat reader to view this file)
Kandan shlokam Hi everyone, This shlokas thread is really very good. Here is the one in Tamil that chant everyday about Murugan. Oruvai aruvai vuladhai iladhai Maruvai malarai maniyai oliyai Karuvai oyirai gadhiyai vidhiyai Guruvai varuvai arulvai Guhane! The meaning is God is both as form and formless, He is everything as a flower, Bell, Sound of the bell. He is the foetus and jeevan. He is the fate and Teacher. Kindly bless us.
விநாயகர் அகவல் - Vinayagar Agaval in Tamil விநாயகர் அகவல் சீதக்களப செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசைபாட பொண்ணுரை ஞானும்பூந்துகிலாடையும் வன்னமருங்கில் வளர்ந்தழகெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சுகரமும் அங்குசாபாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிறு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரிநூல் திகழொளிமார்பும் சொற்பதங் கடந்த தூரிய மெஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரு மூஹிகக் களிறே இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டித் தாயாயெனக்குத் தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய் பொருந்தவே வந்தென் உளந்தனிற்புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரம் இது பொருளென வாடாவகை தான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புற கருணையி லினிதெனக்கருளிக் கருவிக ளடுங்குங் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக்கருளிஸ் மலமொரு நான்குந் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆரா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப்பேச்சுரை அறுத்தே இடையிங் கலையில் எழுத்தறிவித்துக் கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக் குண்டலி யதனிற்கூடிய அசைபை விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலாலெழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முகதூலமுஞ்சதுர் முகசூட்சமும் என் முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையுந் தெரிசனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரி எட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித் தெனக்கருள் செய்து முன்னை அறிவித்தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக்களைந்து வாக்கு மனமுமில்லா மனோலயந் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள் வெளியிரண்டிற் கொன்றிடமென்ன அருள் தரும் ஆனந்தத்தழுத்தியென் செவியில் எல்லையில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச் சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவா யாப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேதமும் நீறும் விளக்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கருத்தினரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயகர் விரைகழல் சரணே சரணே சரணே
Murugan tamil slokam Hi Ladies, I recite the below Murugan slokam in tamil daily. My most favorite and simple one to remember too. Let me know how you all like it. முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே உன்னுடைய தண்டைக் கால் எபொழுதும் நம்பியே கை தொழுவேன் நான் With Love, Kanmani
When you offer "doopam" தூபம் காட்டும்பொழுது சொல்லவும்: சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என் நாவில் மறந்தறியேன் உலந்தூர் தலையிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறையும் மானே இது ஒரு அப்பர் பாடல். வாழ்க வளமுடன். அன்புள்ள, சித்ரா.
For Lord Arumugam [Murugan] Eru mayil eri vilayaadum mugam ondru, Eesan udan nyaana mozhi pesum mugam ondru, Koorum adiyaargal vinay theertha mugam ondru, Kundruruva vel vaangi nindra mugam ondru, Maaru padu soorarai vadhaitha mugam ondru, Valliyai manam punara vandha mugam ondru, Arumugan aana porul nee arulal vendum, Aadhi arunachalam amarndha perumaane .
Tamil shloka for " Naivedyam" ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்துஞ்சீலந்தான் பெரிதும் உடையானைச்சிந்திப்பாரவர் சிந்தைஉள்ளானை ஏலவார், குழலாளுமை நங்கையென்றும் ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனைக் கமபனெம்மானைக் காணக்கன் அடியேன் பெற்றவாறே இது ஒரு சுந்தரர் பாடல். வாழ்க வளமுடன். அன்புள்ள, சித்ரா.
Shlokam for " Karpuram " - general இது சேக்கிழார் இயற்றியது. கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோல நீடி அருமறைச் சித்தத்தின் மேலாம் சிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி இது சம்பந்தர் இயற்றியது ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச்சொக்கலிங்கம் மூலமாய் எங்கும் முளைத்த லிங்கம் பாலொளியாம் மத்தனே கூடல் மதுராபுரி உமையாள் அத்தனே ஆலவாயா வாழ்க வளமுடன். அன்புள்ள, சித்ரா.
Shlokam for " karpuram" - for Ambikai கரும்புமுரல் கடிமலர்ப்பூங்குழல் போற்றி உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம் போர்றி இரும்புமனங் குழைத்தென்னை எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி அரும்புமிள நகை போற்றி ஆரணது புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி இது பரஞ்சோதி முனிவர் இயற்றியது. வாழ்க வளமுடன். அன்புள்ள, சித்ரா.