49 - தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத் தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா (அ) 50 - தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான் தட்டழிந்தேன் அருள் அருணாசலா (அ) 51 - தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான் நட்டமாவேன் அருள் அருணாசலா (அ) 52 - தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும் சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா (அ) 53 - நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள் நகையிட்டுப் பார் நீ அருணாசலா (அ) 54 - நாணிலை நாட்ட நானாய் ஒன்றி நீ தாணுவா நின்றனை அருணாசலா (அ) 55 - நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன் நின் அருள் மழை பொழி அருணாசலா (அ) 56 - நீ நான் அறப்புலி நிதம் களிமயமா நின்றிடும் நிலை அருள் அருணாசலா (அ) 57 - நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட எண்(ண) அலை இறும் என்று அருணாசலா (அ) 58 - நூலறிவு அறியாப் பேதையன் எந்தன் மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா (அ) 59 - நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல் நக்கனா நின்றனை அருணாசலா (அ) 60 - நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ மோசம் செயாது அருள் அருணாசலா (அ) அன்புடன் சித்ரா.
61 - நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில் நாடி உட்கொள் நலம் அருணாசலா (அ) 62 - நொந்திடாது உந்தனைத் தந்து எனைக் கொண்டிலை அந்தகன் நீ எனக்கு அருணாசலா (அ) 63 - நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா (அ) 64 - பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள் பற்றிட அருள்புரி அருணாசலா (அ) 65 - பார்த்தருள் மால் அறப் பார்த்தினை எனின் அருள் பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா (அ) 66 - பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள் பித்தம் தெளி மருந்து அருணாசலா (அ) 67 - பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர் பீதி உந்தனக்கு ஏன் அருணாசலா (அ) 68 - புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை புல்லிடவே அருள் அருணாசலா (அ) 69 - பூமணம் மா மனம் பூரண மனம் கொளப் பூரண மனம் அருள் அருணாசலா (அ) 70 - பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவர் அருணாசலா (அ) 71 - பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப் பேயன் ஆக்கினை என் அருணாசலா (அ) 72 - பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல் பற்றுக் கோடாய்க் கா அருணாசலா (அ) அன்புடன் சித்ரா.
73 - பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன் போதத்தைக் காட்டினை அருணாசலா (அ) 74 - போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட் போராட்டம்காட்டு அருணாசலா (அ) 75 - பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன் பவிசு கண்டுற அருள் அருணாசலா (அ) 76 - மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா (அ) 77 - மானங்கொண்டு உதுபவர் மானத்தை அழித்து அபிமானமில்லாது ஒளிர் அருணாசலா (அ) 78 - மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான் வஞ்சியாது அருள் எனை அருணாசலா (அ) 79 - மீகாமன் இல்லாமல் மாகாற்று அலை கலம் ஆகாமல் காத்தருள் அருணாசலா (அ) 80 - முடு அடி காணா முடி விடுத்து அனைநேர் முடுவிடக் கடனிலை அருணாசலா (அ) 81 - மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத் தூக்கி அணைந்து அருள் அருணாசலா (அ) 82 - மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா (அ) 83 - மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்ச் சேர்ந்து நீ மேன்மை உற்றனை என் அருணாசலா (அ) 84 - மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை வசம் ஆக்கினை அருணாசலா (அ) அன்புடன் சித்ரா.
Dear Chithra... I am sincerely thankful to you for the slogams / shlokas that you are posting. Apologies that I could not be active on IL in the last few weeks, due to some personal circumstances. Hopefully, you will see more of me from now. KB...none of Chithra's posts / shlokas cannot be not famous !!! Belated Pongal wishes to all of you. Thanks and love Pavithra
Dear KB & Pavithra, I love this shloka so much, after starting it here. Like most of us, I love tamil shlokas because the understanding is clear.I have downoaded the MP3 & listen to it regularly. KB, the Ramanashram book which I bought contains Sri Arunachala navamani malai Sri Arunachala pathikam Sri Arunachala ashtakam Sri Arunachala pancharatnam all in tamil. Any takers?? Love, Chithra.
Dear Chithra... Of course, I will take whatever you post No-nnuu solvomaaa? Please post at your convenience.. Love Pavithra
85 - மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ நட்டம் ஆடினை என் அருணாசலா (அ) 86 - மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்தும் என் மோகம் தீராய் என் அருணசலா (அ) 87 - மௌனியாய்க் கல்போல் மலராது இருந்தால் மௌனம் இது ஆமோ அருணசலா (அ) 88 - யவன் என் வாயில் மன்ணினை அட்டி என் பிழைப்பு ஒழித்தது அருணசலா (அ) 89 - யாரும் அறியாது என் மதியினை மருட்டி எவர் கொளை கொண்டது அருணசலா (அ) 90 - ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை ரமித்திடச் செயவா அருணசலா (அ) 91 - ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணசலா (அ) 92 - லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனை பட்சித்தாய் பிராணனோடு அருணசலா (அ) 93 - லாபம் நீ இகபரலாபம் இல் எனை உற்று லாபம் என் உற்றனை அருணாசலா (அ) 94 - வரும்படி சொலிலை வந்து என்படிஅள வருந்திடு உன் தலைவிதி அருணசலா (அ) 95 - வாவென்று அகம் புக்கு உன் வாழ்வு அருள் அன்றே என் வாழ்வு இழந்தேன் அருள் அருணசலா (அ) 96 - விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர் விட்டிட அருள்புரி அருணசலா (அ) அன்புடன் சித்ரா.
Dear KB, I haven't heard of Arunachala Aksharamanamalai before but thanks to you and Chithra Maami. I really love this and each and verse is enchanting. I always think that I don't know much shlokas on Lord Shiva other than Linkaashtagam and Mrithunjaya Stosthram. Once again thanks to you and Chithra Maami for sharing Arunachala Aksharamanamalai. Regards Priya
Chithra Maami, Please post the other shlokas of Arunachalaeswarar viz, Sri Arunachala navamani malai Sri Arunachala pathikam Sri Arunachala ashtakam Sri Arunachala pancharatnam as mentioned in your post.. We always take pleasure in learning new shlokas and information from you. Thanks Priya