Hi KB, I have mp3 format which is 5.3 MB. The site doesn't allow us to have more than 1 MB zip files. Do let me know your personal id where i could sent the same. Yu can download the same The Bhagavan Sri Ramana Maharshi website - Music site - Arunachala Siva here. Enjoy listening..
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை: காப்பு: அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக் கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே நூல்: அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா ! அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா ! 1 - அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அ) 2 - அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ) 3 - அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ) 4- ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ) 5 - இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா ! (அ) 6 - ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா ! (அ) 7 - உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அ) 8 - ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அ) 9 - எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா ! (அ) 10 - ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா ! (அ) 11 - ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா ! (அ) 12 - ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணசலா ! (அ) அன்புடன் சித்ரா.
Dear Mom, Thanks for the nice tamil words of the aksharamalai. I am still following your posts. Love Birundha
Dear Birundha, Thanks. This is not very common, but contains a lot of "hidden philosophy" ! Love, Chithra.
13 - ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா (அ) 14 - ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை ஆளுவது உன் கடன் அருணாசலா (அ) 15 - கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா (அ) 16 - காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா (அ) 17 - கிரி உரு ஆகிய கிருபைக் கடலே கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அ) 18 - கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என் கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா (அ) 19 - குர்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள் குரு உருவாய் ஒளிர் அருணாசலா (அ) 20 - கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா (அ) 21 - கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை அஞ்சல் என்றே அருள் அருணசலா (அ) 22 - கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக் கேடு செய்யாது அருள் அருணாசலா (அ) 23 - கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொள அருள் அருணாசலா (அ) 24 - கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக் கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா (அ) அன்புடன், சித்ரா.
25 - கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக் குறை என்செய்தேன் அருணாசலா (அ) 26 - கௌதமர் போற்றும் கருணை மாமலையே கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா (அ) 27 - சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன சலசம் அலர்த்தியிடு அருணாசலா (அ) 28 - சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான் சாந்தமாய்ப் போவன் அருணாசலா (அ) 29 - சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத வாயைத்திற அருண்மதி அருணாசலா (அ) 30 - சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள் சீரை அழித்து அருள் அருணாசலா (அ) 31 - சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச் சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா (அ) 32 - சூது செய்து என்னைச் சோதியாது இனி உன் ஜோதி உருக்காட்டு அருணாசலா 9அ) 33 - செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு உருப்படு வித்தை காட்டு அருணாசலா (அ) 34 - சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர் ஆற்று அழிவேன் அருணாசலா (அ) 35 - சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால் உய்வகை ஏது உரை அருணாசலா (அ) 36 - சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று சும்மா இருந்தாய் அருணாசலா (அ) அன்புடன், சித்ரா.
37 - சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில் சொல் வேறு என்கதி அருணாசலா (அ) 38 - சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே சலியாது இருந்தாய் அருணாசலா (அ) 39 - ஞமலியில் கேடா நான் என் உறுதியால் நாடி நின் உறுவேன் அருணாசலா (அ) 40 - ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ) 41 - ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை என் அருணாசலா (அ) 42 - தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய் தத்துவம் இது என் அருணாசலா (அ) 43 - தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா (அ) 44 - திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும் என்றனை என் அருணாசலா (அ) 45 - தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான் திரும்ப உற்றென்ன் அருள் அருணாசலா (அ) 46 - துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன் ஒப்பிட வாய் ஏன் அருணாசலா (அ) 47 - தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் தோயவே அருள் என் அருணாசலா (அ) 48 - தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச் சேர ஒழித்தாய் அருணாசலா (அ) அன்புடன் சித்ரா.