6 ஆறு மனமே கவித்திறனில் கவிச்சிங்கம் வழியே கண்ணதாசனும்! ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு இந்த பாட்டை சிவாஜி அறுபடைவீடுன்னு சொல்ற, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, ஆறு லொகேஷன்லயும் போய் வெய்யில்ல வெருங்காலோட பாடினத பாத்துருப்போம். ஆறு என்ற சொல்லை சிலேடையா கண்ணதாசன் அருமையா பயன் படுத்தி , மனமே ஆறு (சாந்தமா இருன்னு ஒரு அர்த்தமும்) மனமே ஆண்டவன் கட்டளை மொத்தம் ஆறு, அதாவது 1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி -சொல்லுக்கு செய்கை பொன்னாகும் 2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் 3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்... உண்மை என்பது அன்பாகும். 4. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் -பெரும் பணிவு என்பது பண்பாகும் 5. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். இதில் மிருகம் என்பது கள்ள மனம் 6. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம். இதை எல்லாம் அறிந்தாலே மனத்தில் வாழும் ஆண்டவனை பார்கலாம்னு ஒரு அர்த்தமாயும் ரொம்ப deftly கையாண்டுருப்பேர். Now coming to the number six and the similarity spotted in Swami Desikan’s work in 13th century in his Goda Stuti, he has compared Godha Devi to ஆறு (6)ஆறுகள் (நதிகள்) rivers 1. ஷோண நதி, 2. துங்கபத்ரா நதி, 3. ஸரஸ்வதி நதி, 4. விரஜா நதி , 5. கோதாவரி நதி, 6. நர்மதா நதி Further, the beauty is that, this is in the ஆறாவது ஸ்லோகம் sixth sloka! வடமொழியிலும் வண்தமிழை இணைக்கும் நம் கவி! शोणाधरेपि कुचयोरपि तुङ्गभद्रा वाचां प्रवाह निवहेपि सरस्वती त्वम् । अप्राकृतैरपिरसैर्विरजा स्वभावात् गोदापि देवि कमितुर्ननु नर्मदासि ॥6 வாட்ஸ் ஆஃப் நன்றி