21-கிருஷ்ண லீலா! அன்னையின் பயம். அன்னையவள் தன் மகனை ,தன் அருகில் வைத்திட ஆவல் கொண்டால். தன்,கண்ணெதிரே அவனை நிறுத்திக்கொள்ள நினைத்திட்டால்,எனவே. தன் கண்ணையனை அழைத்து தன் மடியில் இருத்தி சொல்லுகிறாள், என் அருமை கண்ணையா,விளையாட நீ வெகு தூரம் செல்லாதே, இபோழுது தான் செய்தி வந்தது,வனத்த்தினிலே ,ஒரு பூச்சாண்டி இருகின்றான், அவன் ஒன்றும் அரியா சிறுவர்களை கவர்ந்து செல்பவனாம்,கோர உருவம் கொண்டவனாம். பார்க்க பயமாக இருக்கிறான் ,என ஒரு சிறுவன் அழுது, பயந்ததை நானே பார்த்தேன், எனவே என் கண்ணே ,நீ இங்கே நம் வீட்டின் முன் அண்ணனுடன் விளையாடு , என அன்னை பகர்ந்திட ,அமைதியாய் கேட்டுகொண்டான் மாயவன், அண்ணன் பலராமன், தன் அருகே தன் தம்பியை அனைத்து கொண்டான்.