17 -கிருஷ்ண லீலா! பால கிருஷ்ண ரூபம், கண்ணனின் கார்மேக வடிவதனை காண கண் கோடி வேண்டும் , வடிவான,வடிவமிதை ஒரு முறை காண தவமிருப்போர் பற்பலர், தேவரும்,முனிவரும்,மனிதரும் காண தெவிட்டாத ரூபம் இது, கிருஷ்ணனின் கட்டுக்கடங்கா கருங்கூந்தல் காண்பதற்கு இப்படியாம், நாற்புறமும் சிதறிய நவநீதன் கூந்தல் பார்பதற்கு இப்படியாம், சிவபெருமான் ,சிசுவடிவாய் சிகையாகி நின்றார் போலே! கண்ணனின் அழகான பிறை நெற்றியிலே இடும் திலகமது, சங்கரனார் மன்மதனை எரித்த நெருப்பு போலே மிளிர்கிறது! கழுத்தினிலே அணிந்துள்ள ,நீலமணி கற்கள் கொண்ட பதக்கமது, நீலகண்டர் கழுத்ததனை நினைவினிலே நிறுத்துகிறது! ஹரியினது மார்பில் உள்ள பிறைவடிவ சிங்கமுடி சுருன்றார் போன்ற மச்சம் , சிவனவரின் தலை சந்திரன் இடம் இறங்கி மார்பினிலே வந்தார் போலுள்ளது ! கருநீல வண்ண மார்பினிலே தவழும் காட்டு மலர் மாலையது,செம்மையுற உள்ளது! சியாமளனின் ,உடல் தனிலே படிந்துள்ள முற்றத்தின் தூசி,பார்பதற்கு, சிவனார் எரித்த மன்மதனின் சாம்பலை போல் தெரிகிறது! நந்தலாலாவின்,வடிவான வடிவதனை நாமும் மனதினிலே காண்போமே!
Hi Deepa, chinna kannanai nerile kaanbadhu polave irukiradhu ungal varigal... Maaya kannanai patri yezuvadhil yethanai maayam seikireergal neengal.... Azhagu milirgiradhu kannanidamum ungal varigalilum.....
barathi, your fb,giving boost to me to write. thanks for your comment,and regularly come to my krishna leela!