சில மாதங்கள் தான் ஆகின்றன உன்னை என் இதய மாளிகயில் குடியெற்றி..! தினம் தினம் வாழ்வை பரவசமாக்கிகொண்டிருக்கிராய்..! உன்னை காணவே காலைக்கதிரவனின் முகத்திலும் விழிக்கிறேன்..! பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்திருப்பதுபோல், காத்திருக்கிறேன் உன்னை வருகைக்காக..! என்னை பார்த்ததும் நீ நாணத்தால் வெட்கி தலை குணிகிறாயோ இல்லையோ நீ என் அருகே வரும் வேளயில்,உடல் சிலிர்த்து கண்கள் மூடி தொண்டைகுழி காய்ந்த்து,பரவசத்தில் உயிர் சில நிமிடங்கள் எங்கோ சென்று திரும்புகிறது..! பேருந்திலும் உன் அருகே நிற்கும் பாக்கியம் பெற எத்தனை கடவுள்களிடம் வேண்டிகொள்கிறேன் என்று கணக்கிட முடியவில்லை..! பட்டும் படாமல்.. தொட்டும் தொடாமல்.. பார்த்தும் பார்க்காமல்.. தெறிந்தும் தெரியாமல்.. பேருந்தில் உன் அருகே பயணம் செய்யும்போது வரும் தவிப்பு, பிறக்க போகும் குழந்தைக்காக காத்திருக்கும் தந்தையாகப்போகின்ற கணவனின் தவிப்பைப்போன்றது..! இதோ, இன்று உன்னிடம் உனக்கு தெரிந்தும் தெரியாத, என் காதலை சொல்லிவிடுவது என்ற முடிவோடு இந்த கடிதம்..! சந்தோஷக்கடலில் உள்ள அனைத்து முத்துக்களையும் உனக்காக கொண்டு வருவேன் என்று சொல்லவில்லை..! உன்மைக்காதலென மார்தட்டிகொள்ளவுமில்லை..! பொய்க்காதல் இல்லையென மண்றாடி கேட்கிறேன்..! என் பேணாவும் சலித்து போய் அதன் நுணியில், மையை கொட்டுகிறது என்னை கிண்டல் செய்து “ஒரு காதல் கடிதமெழுத இத்துனை அவஸ்தையா என்று”..! பாவம் அதற்கு தெரியாது நீச்சல் தெரியாத கடலில் தத்தலிப்பது எவ்வளவு கொடுமை என்று..! இனியவளே.. என் இதய வாசலை ஒருமுறையேனும் உன் வாசல் வழியாகவாவது எட்டிப்பார்..! ஆண் பிள்ளையென்று பாராமல் உனக்காக கவிதைக்கோளம் வரைந்திருக்கிறேன்.. உன் வருகைக்காக காத்திருக்கும், காதலையும் உன்னையும் மதிக்கும் காதலன்..!!!
சுரேஷ், அனுபவமோ இல்லை கற்பனையோ காதலியிடம் காதல் சொல்ல/செல்ல இருந்த மனநிலையை அழகாக சொல்லிடீங்க. வாழ்த்துக்கள்
காதலை மதிக்கும் காதலனைத் தேடி விரைவில் வருவாள் காதலி! நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள் சுரேஷ்! :thumbsup
indha puthiyavanin vaarthaigalai padithuvittu vaalthiya nanba/nanbi-galukkum en manamaarntha nandrigal pala.. intha kaditham eppotho varappogum en-avalukkaaga thaan eluthinen..!
சுரேஷ் ஆண்மகனாய் தினம் தினம் நினைத்து துடித்து தொலைத்து தவித்து காதல் வலியில் கவிஞனாய் உங்கள் இதயம் எழுதிய இளமை மடல் மிக அருமை. உண்மை உள்ளத்தின் பிரதிபலிப்பு. வலி தீர வழி பிறக்கும்....காத்திருங்கள்